NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன்
    மணிப்பூர் மாநில கொடியை ஏந்தி மைதானத்தில் நின்ற இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன் சிங்

    மணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 05, 2023
    02:07 pm

    செய்தி முன்னோட்டம்

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் 9வது SAFF சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நேற்று குவைத்தைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது இந்தியா.

    வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் பதக்கத்தைப் பெற மைதானத்தில் அணிவகுத்து நின்ற போது, இந்திய மிட்ஃபீல்டரான ஜீக்சன் சிங் மட்டும், தன்னுடைய கால்பந்து ஜெர்சியின் மீது, வண்ணக் கொடி ஒன்றை ஏந்தி நின்றிருந்தார்.

    அவரது இந்த செயல் பலரது கவனத்தையும் ஈர்க்கவே, அவர் அது தன்னுடைய சொந்த மாநிலமான மணிப்பூரின் கொடி எனத் தெரிவித்திருக்கிறார்.

    கடந்த சில மாதங்களாக வன்முறையால் பற்றியெறிந்து வரும் மணிப்பூரின் கொடியை ஏந்தி பரிசு பெற்ற அவர், மைதானத்தை விட்டுச் செல்லும் வரை அந்த கொடியை ஏந்தியபடியே வலம் வந்து கொண்டிருந்தார்.

    கால்பந்து

    மணிப்பூரின் கொடியை ஏந்திய காரணம் என்ன? 

    "இந்திய மக்களுக்கும், மணிப்பூர் மக்களும், வன்முறையை கையிலேந்தாமல் அமைதியாக கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தக் கொடியை நான் ஏந்தியிருக்கிறேன்", என, தான் மணிப்பூர் கொடியை ஏந்திய காரணம் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

    இவரது இந்த செயலை ஏற்றுக் கொண்டு இந்திய ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் அது குறித்து அதிருப்தியும் தெரிவித்திருக்கிறார்கள். ட்விட்டரிலும் தங்களது அதிருப்தியை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    ரசிகர்களின் அதிருப்திக்கு பதிலளிக்கும் விதமாக தன்னுடைய விளக்கம் ஒன்றையும் சமூக வளைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறார் ஜீக்சன்.

    அதில், "அமைதியை வேண்டி மட்டுமே இந்தக் கொடியை நான் ஏந்தினேன். யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல. நேற்றை இந்திய அணியின் வெற்றி அனைத்து இந்தியர்களுக்குமானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    இந்தியா
    மணிப்பூர்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    கால்பந்து

    பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : 23 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து! உலக கோப்பை
    "புலிக்கு பிறந்தது பூனையாகாது" கால்பந்து விளையாட்டில் கலக்கும் அஜித்குமாரின் மகன் ஆத்விக்!  நடிகர் அஜித்
    பிஎஸ்ஜி அணியிலிருந்து விலகுகிறார் லியோனல் மெஸ்ஸி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு! லியோனல் மெஸ்ஸி
    சவூதி புரோ லீக்கில் விளையாடுவதற்காக ரியல் மாட்ரிட்டில் இருந்து விலகும் பிரபல வீரர்! சவூதி புரோ லீக்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 40 கொரோனா பாதிப்பு கொரோனா
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் ஹெச்டிஎஃப்சி
    'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி நரேந்திர மோடி

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025