NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / தொடர் தோல்வியால் அதிருப்தி : செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம்
    தொடர் தோல்வியால் அதிருப்தி : செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம்
    1/2
    விளையாட்டு 1 நிமிட வாசிப்பு

    தொடர் தோல்வியால் அதிருப்தி : செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 03, 2023
    11:18 am
    தொடர் தோல்வியால் அதிருப்தி : செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம்
    செல்சியா கால்பந்து அணி பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் நீக்கம்

    செல்சியா கால்பந்து அணி பெற்ற படுதோல்வியை அடுத்து பயிற்சியாளர் கிரஹாம் பாட்டர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) நீக்கப்பட்டார். முன்னதாக, இந்த சீசனில் £500 மில்லியன் யூரோவுக்கு அவரை செல்சியா மீண்டும் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் செல்சியா அணி தனது கடைசி 11 ஆட்டங்களில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் கடைசியாக கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 1) ஆஸ்டன் வில்லாவிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பின்னர், ப்ளூஸ் பிரீமியர் லீக் அட்டவணையில் 11வது இடத்திற்கு சரிந்தது. இதனால் அனைவரது அதிருப்தியும் பயிற்சியாளர் பாட்டர் மீது திரும்பியது.

    2/2

    இடைக்கால பயிற்சியாளராக புருனோ சால்டர் நியமனம்

    பாட்டர் நீக்கப்பட்ட நிலையில், பிரைட்டன் அணியின் முன்னாள் டிபெண்டெர் புருனோ சால்டர் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியுள்ள செல்சியா அங்கு நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்டை எதிர்கொள்கிறார்கள். இதற்கான முதல் லெக் போட்டி தொடங்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பயிற்சியாளர் மாற்றம் அணியின் முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு உதவும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையே செல்சியா அணியின் உரிமையாளர்களான டோட் போஹ்லி மற்றும் பெஹ்தாத் எக்பாலி வெளியிட்ட ஒரு அறிக்கையில், "கிரஹாமை ஒரு பயிற்சியாளராகவும், ஒரு நபராகவும் நாங்கள் மிக உயர்ந்த மரியாதையைக் கொண்டுள்ளோம். அவர் எப்போதும் நேர்மையுடன் நடந்துகொண்டார். இந்த முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது." என்று தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கால்பந்து

    கால்பந்து

    மரடோனோ, பீலே வரிசையில் இணைந்த லியோனல் மெஸ்ஸி விளையாட்டு
    ஏப்ரல் 25 முதல் மகளிர் கால்பந்து லீக் போட்டிகள் தொடக்கம் : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு விளையாட்டு
    பிரான்ஸ் அணிக்காக ஐந்தாவது அதிக கோல் அடித்த வீரர் : கைலியன் எம்பாபே புதிய சாதனை விளையாட்டு
    800 கோல்களை அடித்த உலகின் இரண்டாவது கால்பந்து வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை விளையாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023