NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!
    அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்

    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 25, 2023
    06:45 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

    நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தாங்கள் எதிர்கொள்ளும் கடினமான பந்து வீச்சாளர்களில் ஒருவராக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பார் என்று ஆஸ்திரேலியா பேட்டர் மாட் ரென்ஷா தெரிவித்துள்ளார்.

    2021 இல் இடது கை பேட்ஸ்மேன்களின் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை அஷ்வின் படைத்தார்.

    ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மற்றும் ரென்ஷா உட்பட பலர் இடது கை பேட்டர்களாக இருப்பதால், அஸ்வினால் தங்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என ஆஸ்திரேலியாவின் ரென்ஷா கருதுகிறார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுமா?

    வரும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்திய அணி எந்த சிக்கலும் இல்லாமல் தகுதி பெற பார்டர்-கவாஸ்கர் தொடர் முக்கியமானதாக மாறியுள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு இந்தியா நேரடியாக தகுதிபெற வேண்டுமானால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-0 அல்லது 3-1 என வென்றாக வேண்டும்.

    இல்லையெனில், இலங்கை-நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

    இதனால் கடைசி வரை தித்திக் மனநிலையோடு இருக்க கூடாது என்றால், ஆஸ்திரேலியா தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அஸ்வின் ரவிச்சந்திரன்

    சமீபத்திய

    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி
    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025