புதிய 'வாய்ஸ் சாட்' வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலியில் புதிய வாய்ஸ் சாட் என்ற வசதியானது பீட்டா சோதனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 2.23.16.19 என்ற பீட்டா வெர்ஷனைப் பெற்றவர்கள், புதிய வாய்ஸ் சாட் வசதியைப் பயன்படுத்த முடியும். ஒரு குழுவில் இருக்கும் பல நபர்களுடன் ஒரே நேரத்தில் உரையாட இந்த வாய்ஸ் சாட் வசதியைப் பயன்டுத்திக் கொள்ளலாம். 32 நபர்களுக்கும் அதிகமானோர் கொண்ட குழுவில் மட்டுமே தற்போது இந்த வாய்ஸ் சாட் வசதியைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த வாய்ஸ் சாட்டிங் வசதி மூலம் ஒரே நேரத்தில் 32 நபர்கள் மட்டுமே இணைந்து உரையாட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வாட்ஸ்அப்பின் புதிய வாய்ஸ் சாட் வசதி:
இந்தப் புதிய வசதி குறித்து இணைத்தில் கசிந்திருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில், வாட்அப்பின் குழுவின் பெயருக்கு அருகில் அலைவரிசை போன்ற ஐகான் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைக் கிளிக் செய்வதன் மூலம் குழுவில் உள்ள நபர்களுடன் புதிய வாய்ஸ் சாட்டைத் தொடங்க முடியும். இந்த வாய்ஸ் சாட்டில் குழுவில் இருக்கும் நபர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். 60 நிமிடங்கள் வரை யாரும் குறிப்பிட்ட வாய்ஸ் சாட்டில் பங்குபெறவில்லை என்றால், அது தானாகவே முடிவுக்கு வந்துவிடும். சாதாரண சாட்டிங் வசதியைப் போலவே, வாய்ஸ் சாட்டிங்கும் எண்டு-டூ-எண்டு என்கிரிப்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வசதியை அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.