NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!
    தொழில்நுட்பம்

    'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 01, 2023 | 11:17 am 1 நிமிட வாசிப்பு
    'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி!
    AI போட்டியில் சாட்ஜிபிடி மற்றும் பார்டு AI

    'ஜெனரேட்டிவ் AI' என்ற செயற்கை நுண்ணறிவுச் சொல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இணையப் பயனர்களுக்குப் பரீட்சியம் ஆனது. ஆனால், அறிமுகமாகி சில மாதங்களிலேயே அதன் இணைய உலகில் அதன் வளர்ச்சியும், புகழும் அபரிமிதமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி என்ற தங்களது AI சாட்பாட்டை வெளியிட்டது ஓபன்ஏஐ நிறுவனம். வெளியாக சில மாதங்களிலேயே அதற்கு பயனர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பையடுத்து மைக்ரோசாப்ட் அந்நிறுவனத்துடன் கைகோர்க்க, கூகுள் தங்களுடைய ஏஐ சாட்பாட்டான பார்டை வெளியிட்டது. கூகுள் அவசர அவசரமாக போட்டிக்காக ஒரு சாட்பாட்டை வெளியிடுவதார பலரும் கூறிய நிலையில், கூகுள் இதற்கான திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ப்ளேக் லெமாய்ன்.

    முன்னாள் ஊழியரின் பேட்டி: 

    2021-லேயே பார்டு சாட்பாட்டை உருவாக்கத் தொடங்கிவிட்டது கூகுள். ஆனால், அதற்கு அப்போடு பார்டு எனப் பெயர் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் ப்ளேக். 2022 செப்டம்பரிலேயே அந்த AI சாட்பாட்டை கூகுள் வெளியிடத் திட்டமிட்டிருந்ததாகவும், தான் பாதுகாப்பு காரணங்கள் குறித்து எச்சரிக்கை செய்ததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாவும் தெரிவித்துள்ளார் அவர். கூகுள் உருவாக்கி வரும் AI-யானது மனிதர்களைப் போலவே சிந்திப்பதாக கடந்த ஆண்டு ப்ளேக் லெமாய்ன் தகவலை வெளியிட்டதையடுத்து அவரை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. AI சாட்பாட்டை உருவாக்கும் மறஅறும திட்டத்தில் கூகுள் தெளிவாக ஒரு பாதை வகுத்து வைத்திருக்கிறது. சாட்ஜிபிடி-யின் வரவு அதனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை, என பேட்டியில் தெரிவித்துள்ளார் ப்ளேக்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Prasanna Venkatesh
    Prasanna Venkatesh
    Mail
    தொடர்புடைய செய்திகள்
    கூகுள்
    செயற்கை நுண்ணறிவு

    கூகுள்

    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    ஊழியர்களுக்கு 'ஸ்நாக்ஸ்' வழங்குவதை நிறுத்திய கூகுள்!  உலகம்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  ஆன்லைன் மோசடி
    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  பிரிட்டன்

    செயற்கை நுண்ணறிவு

    AI-யின் வளர்ச்சி.. சுருங்குகின்றனவா பெருநிறுவனங்கள்?  சாட்ஜிபிடி
    'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு!  வணிகம்
    'GPT' என்ற சுருக்கத்தின் ட்ரேடுமார்க்கிற்கு விண்ணப்பித்திருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்!  சாட்ஜிபிடி
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  சாட்ஜிபிடி

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023