
சுபன்ஷு சுக்லாவின் ஆக்ஸியம்-4 மிஷன் மோசமான வானிலை காரணமாக ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய விமானப்படை விமானி மற்றும் ககன்யாத்ரி சுபன்ஷு சுக்லாவை உள்ளடக்கிய சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஏவப்படும் ஆக்ஸியம்-4 மிஷன், மோசமான வானிலை காரணமாக புதன்கிழமைக்கு (ஜூன் 11) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் திங்களன்று வெளியிட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இதை உறுதிப்படுத்தி உள்ளது.
நாசாவுடன் இணைந்து தனியார் விண்வெளிப் பயண முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மிஷன், அமெரிக்கா நேரப்படி ஜூன் 10 ஆம் தேதி காலை 8:22 மணிக்கு நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதள வளாகம் 39ஏவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டது.
இருப்பினும், வானிலை பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.
டாக்டர் வி. நாராயணன்
இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் அறிவிப்பு
இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும், விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றும் இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் தாமதத்தை உறுதிப்படுத்தினார்.
"வானிலை காரணமாக, இந்திய ககனயாத்ரியை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கான ஆக்ஸியம்-4 மிஷனின் ஏவுதல் ஜூன் 10, 2025 இல் இருந்து ஜூன் 11, 2025 க்கு ஒத்திவைக்கப்படுகிறது." என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸியம்-4 மிஷனில் சுபன்ஷு சுக்லா உட்பட நான்கு குழு உறுப்பினர்கள் உள்ளனர். இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயண முயற்சிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
ஆக்ஸியம்-4 மிஷன் ஏற்கனவே ஜூன் 8 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரோவின் எக்ஸ் தள பதிவு
Launch of Axiom-4 mission to International Space Station:
— ISRO (@isro) June 9, 2025
Due to weather conditions, the launch of Axiom-4 mission for sending Indian Gaganyatri to International Space Station is postponed from 10th June 2025 to 11th June 2025.
The targeted time of launch is 5:30 PM IST on 11th…