NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 21, 2023
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்கான முக்கியமான அடையாளச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை செயல்படுகிறது .

    2015 ஆம் ஆண்டில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையில் வண்ண வடிவத்தை அறிமுகப்படுத்தியது.

    உங்கள் பழைய கருப்பு மற்றும் வெள்ளை வாக்காளர் அட்டையை, புதிய வண்ணத்துடன் மாற்ற விரும்பினால், இதோ உங்களுக்கு உதவுவதற்கு ஒரு செயல்முறை வழிகாட்டி:

    card 2

    தேவையான ஆவணங்கள்

    கலர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற, உங்களுக்கு சில அத்தியாவசிய ஆவணங்கள் தேவைப்படும்.

    உங்கள் முகவரிக்கான சான்று, உங்கள் வயதை உறுதிப்படுத்தும் ஆவணம் (நீங்கள் 18 முதல் 21 வயதிற்குள் இருந்தால் மட்டுமே அவசியம்) மற்றும் உங்களின் சமீபத்திய புகைப்படம் ஆகியவை இதில் அடங்கும்.

    ஆவணங்களுடன், உங்கள் நகரம் அல்லது மாவட்டத்தின் பதிவு மையத்தில், ரூ. 30 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

    card 3

    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை

    1. https://voters.eci.gov.in/ இணையதளத்தில், வாக்காளர் போர்ட்டல் என்ற சேவையை தேர்வு செய்யவும்.

    2. முகப்புப் பக்கத்தில், "பொது வாக்காளர்களுக்கான புதிய பதிவு" பெட்டியின் கீழ், "படிவம் 6 ஐ நிரப்பவும்" என்பதைக் கிளிக் செய்து, திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

    3. நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் NRI ஆக இருந்தால், நீங்கள் படிவம் 6A-ஐ நிரப்பலாம்.

    4. படிவம் 6 ஐ பூர்த்தி செய்து, உங்கள் புகைப்படம் மற்றும் பிற விவரங்களை பதிவேற்றி, அதைச் சமர்ப்பிக்கவும்.

    card 4

    ஆஃப்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை

    1. உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை அலுவலகத்தைக் கண்டறியவும்.

    2. தேவையான அனைத்து ஆவணங்களுடன் அங்கே சென்று, உங்கள் தேவையை, அங்கிருக்கும் அலுவரிடம் தெரிவித்து, விண்ணப்பத்தை பெறவும்.

    3. சரியான தகவலுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்யவும்.

    4. தேவையான அனைத்து ஆவணங்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஒப்படைக்கவும்.

    5. இந்திய தேர்தல் ஆணையம் அனைத்தையும் சரிபார்த்து அங்கீகரித்தவுடன், அவர்கள் உங்களுக்கு வண்ணத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்கள்.

    card 5

    அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள

    உங்கள் வண்ண வாக்காளர் அடையாள விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ள, பின்வரும் முறையை பின்பற்றவும்:

    1. https://voters.eci.gov.in/ இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் போர்ட்டல் சேவையைத் திறந்து, "சேவைகள்" tab -இன் கீழ் "விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

    2. விண்ணப்பப் படிவ எண் மற்றும் தேவையான விவரங்களை உள்ளிட்டு, 'தேடு' என்பதைக் கிளிக் செய்யவும்.

    3. சரிபார்க்கப்பட்டதும், வாக்காளர் அட்டை எண் மற்றும் இ-சேவை மைய எண் காட்டப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    தேர்தல்

    ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார் ஈரோடு

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு உச்ச நீதிமன்றம்
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025