NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை

    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 

    எழுதியவர் Nivetha P
    Apr 18, 2023
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக கும்பகோணம் திகழ்கிறது.

    கடந்த 1868ம்ஆண்டு கும்பகோணம் ஜில்லாவாக இருந்ததற்கு சான்றுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கும்பகோணத்தில் தென்னகத்தின் கேம் பிரிட்ஜ் என கூறப்படும் அரசு கல்லூரி, நவகிரஹ கோயில்கள், புராதான சின்னங்கள், 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாசி மகாமகம், பல்வேறு கோயில்கள், உலக புகழ்பெற்ற விழாக்கள், வர்த்தகம் என அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளது.

    பல்வேறு அரசுத்துறை தலைமை அலுவலகங்களும், தனியார் வங்கிகளின் தலைமையகமும் இங்கு தான் அமைந்துள்ளது.

    தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றமே கும்பகோணத்தில் தான் அமைந்துள்ளது.

    இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட கும்பகோணத்தினை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 25 ஆண்டுகால போராட்டத்துடன் கூடிய கோரிக்கை ஆகும்.

    தனி மாவட்டம் 

    கும்பகோணத்தின் சிறப்புகள் குறித்து வழக்கறிஞர் ஜீவானந்தம் பேட்டி 

    இதுகுறித்து தஞ்சை வழக்கறிஞர் ஜீவானந்தம் அளித்துள்ள பேட்டியில், மாற்றம் என்பது வளர்ச்சி மற்றும் தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகும்.

    தஞ்சையில் உள்ள அணைக்கரை போன்ற பகுதியில் உள்ளோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டுமென்றால் சுமார் 75கி.மீ.,பயணம் செய்யவேண்டும்.

    அதுவே கும்பகோணம் தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டால் தனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்படும்.

    அதுமட்டுமின்றி புதிய காவல்ஆய்வாளர் அலுவலகம், தனி ஆர்டிஓ.,அலுவலகம், புது பாலங்கள் போன்றவைகளும் அமையும்.

    கும்பகோணத்திற்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கும்.

    இதனால் மாவட்டரீதியாகவும் வளர்ச்சி பெறுவதோடு, பொதுமக்களும் பயனடைவர்.

    மன்னர்கள் ஆண்ட பூமியாக, போர்கள் அதிகம் நடந்த இடமாக திகழும் கும்பகோணத்தினை நிதி பற்றாக்குறை காரணமாகவே தமிழக அரசு தனி மாவட்டமாக பிரிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19
    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை

    தமிழ்நாடு

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.5 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை  ஈரோடு
    சென்னை எழும்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 100 பேர் கைது  சென்னை
    ஐபிஎல் 2023 கிரிக்கெட்போட்டியை காண பாஸ் கொடுங்கள் - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை  கிரிக்கெட்
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - பேராசிரியர் ஜாமீன் மனுவினை ரத்து செய்த நீதிமன்றம்  சென்னை

    தமிழக அரசு

    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் கருணாநிதி
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு இந்தியா

    மாவட்ட செய்திகள்

    மதுரையில் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை ஒரே ஆண்டில் பாழ் மதுரை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி தூத்துக்குடி
    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025