NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
    இந்தியா

    வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

    வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
    எழுதியவர் Nivetha P
    Jan 07, 2023, 06:01 pm 1 நிமிட வாசிப்பு
    வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
    வண்டலூர் பூங்கா

    சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்துள்ளார்கள். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 219 தினக்கூலி பணியாளர்கள், 15 ஆண்டுகள் தினக்கூலியாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். பூங்கா நுழைவுவாயில் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அன்றைய தினமே பூங்கா சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

    கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தொடரும் போராட்டம் - ஊழியர்கள் இல்லாததால் பணிகள் முடக்கம்

    உயிரியல் பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் தினக்கூலி ஊழியர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது, நிரந்தரமாக பயோமெட்ரிக் வருகை பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதற்கு அதிகாரிகள், இனி வரும் காலங்களில் பயோமெட்ரிக் முறை தான் நடைமுறையில் இருக்கும். அதனை ரத்து செய்ய முடியாது, மற்ற 8 அம்ச கோரிக்கைக்களை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள் தொடர்ந்து இன்று 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டம் காரணமாக, பூங்காவில் உள்ள குறைந்தளவு நிரந்தர ஊழியர்களால் அனைத்து விலங்குகளை பராமரிப்பது, உணவளிப்பது, பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    போராட்டம்

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    போராட்டம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023