NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
    வண்டலூர் பூங்கா

    வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

    எழுதியவர் Nivetha P
    Jan 07, 2023
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.

    இங்கு பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் பணிக்கு வந்துள்ளார்கள்.

    அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார்கள்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 219 தினக்கூலி பணியாளர்கள், 15 ஆண்டுகள் தினக்கூலியாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

    பூங்கா நுழைவுவாயில் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அன்றைய தினமே பூங்கா சார்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

    குறைந்தளவு நிரந்தர ஊழியர்கள்

    கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தொடரும் போராட்டம் - ஊழியர்கள் இல்லாததால் பணிகள் முடக்கம்

    உயிரியல் பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் தினக்கூலி ஊழியர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது, நிரந்தரமாக பயோமெட்ரிக் வருகை பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    அதற்கு அதிகாரிகள், இனி வரும் காலங்களில் பயோமெட்ரிக் முறை தான் நடைமுறையில் இருக்கும்.

    அதனை ரத்து செய்ய முடியாது, மற்ற 8 அம்ச கோரிக்கைக்களை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள் தொடர்ந்து இன்று 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களது போராட்டம் காரணமாக, பூங்காவில் உள்ள குறைந்தளவு நிரந்தர ஊழியர்களால் அனைத்து விலங்குகளை பராமரிப்பது, உணவளிப்பது, பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    போராட்டம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025