NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்!
    கோவையில் சிறையில் உணவு பெற வெடிகுண்டு புரளி எழுப்பிய வேலையில்லாத நபர் கைது

    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்!

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஈரோடு பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது,

    அது சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று கூறி தொலைபேசி அழைப்பினை துண்டித்துள்ளார்.

    இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த தகவலினை ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கூறியுள்ளார்கள்.

    இதனையடுத்து போலீஸ் சூப்பரண்ட் சசிமோகன் உத்தரவின் பேரில், அனைத்து போலீசாரும் குழுக்களாக பிரிந்து பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

    மோப்ப நாயான கயல் வரவழைப்பட்டும் வெடிகுண்டு உள்ளதா என்னும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த தேடலில் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருளும் சிக்கவில்லை.

    அதன்பின்னரே இந்த தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

    15 நாட்கள் நீதிமன்ற காவல்

    தினமும் உணவினை பெறுவதற்காக மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்

    இதனையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை கொண்டு போலீசார் அந்த மர்மநபரை தீவிரமாகத்தேடினர்.

    நடத்தப்பட்ட விசாரணையில், போலி வெடிகுண்டுமிரட்டல் விடுத்த அந்த நபர் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(34) என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    மேலும் அவர் திருப்பூர் பழைய பேருந்துநிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக தகவல்கிடைத்ததன் பேரில், அங்கு திருப்பூர் போலீசார் விரைந்துசென்று சந்தோஷ்குமாரை கைதுசெய்தனர்.

    அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், வேலையில்லாமல் வாழ்க்கையில் போராடி வருவதால் அந்த நபர் இந்த அழைப்பினை செய்துள்ளார்.

    புரளி அழைப்பு விடுத்தால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பார்கள்.

    சிறையில் உணவு தங்குதடையின்றி கிடைக்கும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று கூறியுள்ளார்கள்.

    தற்போது அவர் நீதிமன்றக்காவலில் 15 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கோவை
    ஈரோடு
    திருப்பூர்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    சென்னை

    10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்த நிறுவனம் இந்தியா
    இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை குறைவு தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை பாஜக அண்ணாமலை

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025