NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு
    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் கட்டப்படும் நூலகம்

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022
    11:31 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மாவட்டந்தோறும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறிவுசார் மையம் மற்றும் நூலகங்களை அமைத்து தருமாறு தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றினை வெளியிட்டது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஜெயின் நகரில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், டி.என்.பி.எஸ்.ஸி., யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட மைய நூலகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

    ஜனவரி மாத இறுதிக்குள் பணிகள் முடிவுறும்

    2300 சதுர மீட்டர் பரப்பளவிளான இடத்தில் 457 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் நூலகம்

    அதனால் கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்ட நிதியில் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    2300 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இடத்தில், 457 சதுர மீட்டர் பரப்பளவில் இரு தளம் கொண்ட நூலகம் குழந்தைகள் விளையாட்டு வாயிலாக கல்வி பயிலும் வகையிலான பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகியவற்றுடன் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் நூலகத்தில் இணையத்தளங்களை பயன்படுத்துவதற்காக 4 கணினிகள் கொண்ட அறை, நூல்களை நகல் எடுக்கும் வசதிகளும் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய கட்டுமான பணி 70 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் வரும் ஜனவரி இறுதிக்குள் முடிக்கப்படும்" என்று கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை! விவரக்குறிப்புகள்
    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! கிரிக்கெட்
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி சென்னை
    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025