NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி
    தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

    டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் முப்படைகள், மத்திய ஆயுத படைகள், பிற துணைப்படைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சார்பாக அலங்கார ஊர்திகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

    இதற்காக அலங்கார ஊர்திகளின் மாதிரி படங்கள் மற்றும் 3டி அனிமேஷன் படங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.

    இந்த அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் ஏழு கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேர்வு செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இதனையடுத்து, 2023ம் ஆண்டின் குடியரசு தின விழாவிற்கு தமிழக அரசு சார்பாக மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 ஊர்தி மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டது.

    7 கட்ட ஆய்விற்கு பின்னர் தேர்வான அலங்கார ஊர்தி

    கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் அலங்கார ஊர்தி டெல்லி அணிவகுப்பில் இடம்பெறவில்லை

    இதனையடுத்து ஏழு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தமிழகத்தின் அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    அதே போல், அசாம், குஜராத், ஆந்திரா, ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 16 மாநில அலங்கார ஊர்திகள் மற்றும் யூனியன் பிரதேச மாநிலங்களின் ஊர்திகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022ம் ஆண்டு குடியரசு தினத்திற்கு வ.உ.சி., வேலுநாச்சியார், பாரதியார், ஆகியோரை மையமாக வைத்து தமிழகம் சார்பில் வாகனம் தயாரிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கு மத்திய பாதுகாப்பு துறை வல்லுநர் குழு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி பாஜக
    விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்! உலகம்
    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! தமிழ்நாடு
    விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து! கொரோனா

    தமிழ்நாடு

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் சென்னை
    மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை! கொரோனா
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! அரசியல் நிகழ்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025