NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி குடும்பத்துடன் தரிசனம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்

    எழுதியவர் Nivetha P
    Feb 23, 2023
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மகா சிவராத்திரி கடந்த 18ம் தேதி மிக விமர்சையாக அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெற்றது.

    பக்தர்களும் சிறப்பான பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதன் ஓர் பகுதியாக, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி 42ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதியில் ஓர் தனியார் வளாகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் நடத்தப்பட்டது.

    இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று(பிப்.,22) பங்கேற்றார்.

    இந்த விழா நேற்றோடு முடிவடைந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.

    சாமி தரிசனம்

    'பூர்ண கும்ப' மரியாதையுடன் ஆளுநருக்கு வரவேற்பு

    இதனை தொடர்ந்து இன்று(பிப்.,23) காலை சுமார் 8 மணியளவில் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் தமிழக ஆளுநர் வருகை தந்தார்.

    அவரை கோயில் தீட்சிதர்கள் சார்பில் 'பூர்ண கும்ப' மரியாதையுடன் வரவேற்த்தனர்.

    இதனையடுத்து கனசபை மீது ஏறி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர், நந்தனார் மடத்திற்கு சென்று நந்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளார் என்று கூறப்பட்டது.

    இதற்கிடையே, ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முயற்சி செய்ய வாய்ப்புள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிதம்பரம் கோவில்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்

    சிதம்பரம் கோவில்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம் சென்னை
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை
    மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம் இந்தியா
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 18- பிப்ரவரி 22 வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025