NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்

    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல்

    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023
    09:49 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு சென்னை மெரினாவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதாக கூறி அதற்கான கருத்துக்கேட்பு கூட்டமும் அண்மையில் நடத்தப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்தார்.

    அதில் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இத்திட்டத்தின் மூலம் அதிகம் உள்ளது என்பதால் இதற்கு தடை விதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் மத்திய அரசு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகளின் கீழ் இந்த திட்டத்துக்கு அனுமதியளிக்க தடை விதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    தடைகோரி தொடரப்பட்ட வழக்கு

    பசுமை தீர்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு

    இது குறித்த விசாரணை மீண்டும் நேற்று(பிப்.,3) நடந்த நிலையில், மத்திய,மாநில அரசுத்துறை சார்ந்த சுற்றுசூழல்துறை, மீன்வளத்துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உள்ளிட்ட அரசுத்துறைகள் பதில் மனுத்தாக்கல் செய்ய கோரி உத்தரவிட்டது.

    இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னத்திற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனுவினை தற்போது தாக்கல் செய்துள்ளது.

    அந்த மனுவில், 'அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள், இந்த நினைவு சின்னம் அமைக்கப்படக்கூடாது, மீறி அமைத்தால் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    கருணாநிதி

    சமீபத்திய

    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா
    குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது  குஜராத்

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் மாநிலங்கள்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழ்நாடு

    கருணாநிதி

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை மெரினா கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025