NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை

    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை

    எழுதியவர் Nivetha P
    Apr 05, 2023
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரியலூர், கடலூர், தஞ்சை மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்க பணிகளை துவங்க மத்திய அரசு எதிர்ப்புகளை மீறி டெண்டர் வெளியிட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

    அதன்படி தற்போது தேமுதிக கட்சியின் பொது செயலாளரான விஜயகாந்த் அவர்கள் இந்த விவகாரம் குறித்து தற்போது இணையத்தில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவினை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

    விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

    மாநில அரசு அனுமதி

    வீதியில் இறங்கி போராட்டம் செய்யவும் தேமுதிக தயங்காது - விஜயகாந்த்

    மேலும், விவசாயிகள் மீது பற்று இருப்பதாக கூறிக்கொள்ளும் மத்திய அரசு தற்போது அவர்களுக்கு எதிரான திட்டத்தினை அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    மத்திய அரசு இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும்.

    இல்லையேல் விவசாயிகளை ஒன்று திரட்டி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தவும் தேமுதிக தயங்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கோரி நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    தொடர்ந்து இது குறித்து மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    சுரங்கம் அமைக்க மாநில அரசு அனுமதி அளித்தால் மட்டுமே முடியும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - தேமுதிக எதிர்ப்பு

    #JustIn | “விவசாயிகள் மீது பற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஒன்றிய அரசு தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது”

    -தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை#SunNews | @iVijayakant pic.twitter.com/WLaJOx3QlZ

    — Sun News (@sunnewstamil) April 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    விஜயகாந்த்
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஈபிஎப்ஓ 3.0 முதல் செபி விதி மாற்றம் வரை; ஜூன் மாதம் அமலாகும் மாற்றங்கள் வருங்கால வைப்பு நிதி
    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா

    மத்திய அரசு

    மத்திய பட்ஜெட் 2023-24: சிறப்பம்சங்கள் பட்ஜெட் 2023
    பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள் பட்ஜெட் 2023
    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மாநில அரசு

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் மாநிலங்கள்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025