NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல்
    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல்

    எழுதியவர் Nivetha P
    Feb 20, 2023
    03:00 pm

    செய்தி முன்னோட்டம்

    திண்டுக்கல் மாவட்டம் காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மகன் மாணிக்கம்(26) கபடி விளையாட்டு வீரர்.

    இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைலில் பணிபுரிந்து வந்துள்ளார்.

    நேற்று(பிப்.,19) கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் நடைபெற்ற கபடி போட்டிக்கு விளையாடுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

    போட்டியில் கலந்துகொண்ட மாணிக்கம் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றிபெற்றுள்ளார்.

    தொடர்ந்து மூன்றாம் சுற்று போட்டிக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    தனக்கு அருகில் இருந்த அவரது நண்பர்களிடம் நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார்.

    இதனையடுத்து அவர்கள் மாணிக்கத்தை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

    அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி

    அதனையடுத்து அவரின் மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ள நிலையில், வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில் மரணமடைந்த மாணிக்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    கபடி விளையாட வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இது குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மாணிக்கத்தின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கபடி வீரர் மாணிக்கத்தின் மரணம் தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், அவரை இழந்து துடிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்

    தமிழ்நாடு

    துணி துவைத்ததற்காக ராணுவ வீரர் ஒருவரை அடித்து கொன்ற திமுக கவுன்சிலர் திமுக
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு ஜெயலலிதா
    தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீட்டித்து உத்தரவு ஆதார் புதுப்பிப்பு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு விழுப்புரம்

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025