NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது 
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது 

    எழுதியவர் Nivetha P
    May 05, 2023
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில், அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 72.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆரிப்(35) மற்றும் ஆசாத் ஆகியோரை ஹரியானாவில் வைத்து தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட மேலும் 2 வடமாநில கொள்ளையர்கள் அரியானாவில் உள்ளதாக தெரியவந்தது.

    அவர்களை பிடிக்க விரைந்த தனிப்படை போலீசார் கர்நாடகா மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதன் படி இந்த வழக்கில் இதுவரை 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

    கைது

    கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் 

    அதனை தொடர்ந்து ரூ.20 லட்சம் ரொக்கம், 3 கார்கள், 1 கண்டெய்னர் லாரி உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவேத் அரியானா, ராஜஸ்தான் இடையேயான எல்லையில் ஆரவல்லி மலைப்பகுதியில் பல சவால்களுக்கு மத்தியில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்த ஆசிப் ஜாவேத்'தை துப்பாக்கி முனையில் தமிழக போலீசார் கைது செய்துள்ளார்கள்.

    அவரிடமிருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியினை பிடித்த தனிப்படைக்கு டிஜிபி சைலேந்திர பாபு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் ஹரியானா

    காவல்துறை

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்  திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  திருநெல்வேலி
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  சென்னை

    காவல்துறை

    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  தமிழ்நாடு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  கோவை
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025