தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் மரியாதை!
செய்தி முன்னோட்டம்
தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30, 2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது. இந்திய குடியரசு துணை தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழகம் வந்த சி.பி. ராதாகிருஷ்ணன், தனது முதல் நிகழ்ச்சியாக பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, மதுரைக்கு விமானம் மூலம் வந்தடைந்த துணை ஜனாதிபதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்றடைந்தார். அங்கு, தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, தேசத் தலைவருக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களும் உடன் இருந்தனர்.
முதல்வர்
பசும்பொன்னில் திருமண மண்டபம்
துணை ஜனாதிபதியை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினும், மதுரை மற்றும் பசும்பொன்னிற்கு வருகை தந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பசும்பொன்னில் தேவர் பெயரில் ஒரு திருமண மண்டபம் அமைக்கப்படும் எனக்கூறினார். இதன் செலவு 3 கோடி எனவும் அவர் கூறினார். தேவர் ஜெயந்தியை ஒட்டி சிவகங்கையில் உள்ள பள்ளி மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.