பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு: 5வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது அரசாங்கம்
செய்தி முன்னோட்டம்
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.
இதனால், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் இன்று காலை கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கிடையில், ஐந்தாவது சுற்று பேச்சு வார்த்தை விரைவில் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம், விவசாயிகளின் தலைவர்களிடம் ஏற்கனேவே 4 சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது.
4வது சுற்று பேச்சு வார்த்தையின் போது, பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை கொள்முதல் செய்ய அரசாங்கம் முன்மொழிந்தது.
டெல்லி
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் தள்ளு முள்ளு
ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் பயிர்களை கொள்முதல் செய்யும் அரசின் திட்டத்தை நிராகரித்ததோடு, இன்று மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சம்பு எல்லைக் கடவையில் விவசாயக் குழுக்கள் மனிதச் சங்கிலி அமைத்து போராடி வருகின்றன.
ஒருபுறம் கனரக மண் அள்ளும் இயந்திரங்கள்(ஜேசிபிகள்) மற்றும் டிராக்டர்களுடன் விவசாயிகள் போராடி வரும் நிலையில், மறுபுறம் ஹரியானா காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் அவர்களை தடுக்க முயற்சித்து வருகின்றனர்.
ஹரியானா காவல்துறை ஏற்கனவே ஒரு ரவுண்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி, 1,200 டிராக்டர்கள்/டிராலிகளுடன் நிற்கும் சுமார் 10,000 விவசாயிகளை கீழே நிற்கும்படி எச்சரித்துள்ளது.