NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது
    இந்தியா

    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது

    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது
    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023, 07:12 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம்  பிடித்துள்ளது
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது

    சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 47வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி சமீபத்தில் நடந்தது. இதில் தமிழக அரசின் பல்வேறு அரங்குகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் அரங்குகள், தனியார் அரங்குகள் என பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்நிலையில் இந்த அரங்குகளுக்கு மத்தியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் சிறப்பான முறையில் அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. இந்த பொருட்காட்சியின் நிறைவு நாளன்று அங்கு இடம்பெற்ற அரசுத்துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அமைத்த அரங்குகளுள் சிறந்த அரங்கு தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், அரசுசார்ந்த நிறுவனங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்கு 3வது இடத்தினை பிடித்து பரிசினை பெற்றுள்ளது.

    முதல் இடத்தினை பிடிக்க நடவடிக்கை

    சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த பொருட்காட்சியின் நிறைவு விழாவில், 3ம் இடம்பிடித்த சென்னை மெட்ரோ நிறுவன அரங்குக்கான பரிசினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் டாக்டர்.பிரசன்ன குமார் ஆச்சார்யாவுக்கு வழங்கினர். பரிசினை பெற்றுக்கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர்.பிரசன்ன குமார் ஆச்சார்யா பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடத்தினை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், ஒட்டுமொத்த வகையில் சிறந்த அரங்கிற்கான பரிசினை பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சென்னை
    சுற்றுலாத்துறை

    சென்னை

    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி அரசு மருத்துவமனை
    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  தமிழ்நாடு
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்

    சுற்றுலாத்துறை

    ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் ஊட்டி
    உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?  சுற்றுலா
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்  ஊட்டி
    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் கேரளா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023