NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம்  பிடித்துள்ளது
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது

    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது

    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 47வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி சமீபத்தில் நடந்தது.

    இதில் தமிழக அரசின் பல்வேறு அரங்குகள், அரசு சார்ந்த நிறுவனங்கள் அரங்குகள், தனியார் அரங்குகள் என பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

    இந்நிலையில் இந்த அரங்குகளுக்கு மத்தியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் சிறப்பான முறையில் அரங்காக அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த பொருட்காட்சியின் நிறைவு நாளன்று அங்கு இடம்பெற்ற அரசுத்துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அமைத்த அரங்குகளுள் சிறந்த அரங்கு தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அதனடிப்படையில், அரசுசார்ந்த நிறுவனங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அரங்கு 3வது இடத்தினை பிடித்து பரிசினை பெற்றுள்ளது.

    டாக்டர்.பிரசன்ன குமார் ஆச்சார்யா

    முதல் இடத்தினை பிடிக்க நடவடிக்கை

    சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த பொருட்காட்சியின் நிறைவு விழாவில், 3ம் இடம்பிடித்த சென்னை மெட்ரோ நிறுவன அரங்குக்கான பரிசினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் டாக்டர்.பிரசன்ன குமார் ஆச்சார்யாவுக்கு வழங்கினர்.

    பரிசினை பெற்றுக்கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர்.பிரசன்ன குமார் ஆச்சார்யா பேசுகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடத்தினை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதே போல், ஒட்டுமொத்த வகையில் சிறந்த அரங்கிற்கான பரிசினை பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சுற்றுலாத்துறை

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    சென்னை

    இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் மென்லெஸ் டேக் அவே உணவு இயந்திரம் இந்தியா
    சென்னையில் 200 சிறப்பு முகாம்களில் சளி, காய்ச்சல் பாதிப்புடன் குவிந்த மக்கள் சுகாதாரத் துறை
    சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை தமிழ்நாடு
    தங்கம் விலை 2வது நாளாக கடும் உயர்வு - இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை

    சுற்றுலாத்துறை

    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி இந்தியா
    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை
    பாரம்பரிய சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு தேர்வு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025