NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு
    கோயில் பணியாளர்களுக்கான உத்தரவுகள் - தமிழக முதல்வர்

    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும்,

    திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள், இசை கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 ஓய்வூதியம், ரூ.3000ஆக உயர்த்தியும்,

    கிராம பூசாரிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3000 ஓய்வூதியம் ரூ,4000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட்ள்ளது.

    அதே போல், கோயில்களில் மொட்டை அடிக்க காணிக்கை கட்டணத்தை விளக்கி, அப்பணி செய்வோருக்கு மாதம்தோறும் ரூ.5000 ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

    34%ல் இருந்து 38%மாக உயர்ந்த அகவிலைப்படி

    அகவிலைப்படி உயர்வு மற்றும் மிகை ஊதியம் அதிகரித்து தமிழக முதல்வர் உத்தரவு

    அரசு ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி உயர்த்திய நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் ஒருலட்சம் மற்றும் அதற்கு மேலாக வருவாய் பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு 34%மாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, 38%மாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை மிகை ஊதியம் வழங்குவது போல், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் இயங்கி வரும் திருக்கோயில்களில் பணிபுரியும் முழு நேர, பகுதி நேர, தினக்கூலி போன்ற அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.2000 ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணை கொடைத்தொகை ரூ.3000 உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது கோயில் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, தங்கள் குடும்பத்தோடு பொங்கலை கொண்டாட வழிவகை செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    மு.க.ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    மு.க.ஸ்டாலின்

    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர் விரைவு சாலை
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு போராட்டம்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025