NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
    இந்தியா

    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023, 01:02 pm 0 நிமிட வாசிப்பு
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
    சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு மீதான விசாரணை

    சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில், மனநலம் பாதித்து குடும்பத்தால் கைவிடப்பட்டு சாலையில் திரிபவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்க கோரி பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவிற்கு எந்த பதிலும் இதுவரை வராத காரணத்தினால், அந்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அவர் மனுவில் வைத்துள்ளார். இதனை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் வந்தது. அப்பொழுது, மனுதாரர் ஆஜராகி, மனநலம் பாதித்து சாலையில் திரிவோர் குறித்து தகவல் அளிக்க ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கூட அரசு அறிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    அரசு நிதியுதவி பெறும் 55 மறுவாழ்வு மையங்கள் மற்றும் 5 இல்லங்கள் செயல்பட்டு வருவதாக தகவல்

    இதனையடுத்து தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் தொண்டு நிறுவனங்கள் மூலம் 55 மனநலம் பாதித்தோருக்கான மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், மனநலம் பாதித்து குணமடைந்தோருக்கு வேலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி மற்றும் மதுரையில் ஐந்து இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்காதது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    தமிழ்நாடு

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழக காவல்துறை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி

    சென்னை உயர் நீதிமன்றம்

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொது செயலாளர் தேர்தல் - தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு அதிமுக

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023