NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
    சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு மீதான விசாரணை

    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றத்தில், மனநலம் பாதித்து குடும்பத்தால் கைவிடப்பட்டு சாலையில் திரிபவர்களுக்காக மறுவாழ்வு மையங்கள் அமைக்க கோரி பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவிற்கு எந்த பதிலும் இதுவரை வராத காரணத்தினால், அந்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அவர் மனுவில் வைத்துள்ளார்.

    இதனை தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் வந்தது.

    அப்பொழுது, மனுதாரர் ஆஜராகி, மனநலம் பாதித்து சாலையில் திரிவோர் குறித்து தகவல் அளிக்க ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கூட அரசு அறிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    விளக்கம் அளிக்கக்கோரி உத்தரவு

    அரசு நிதியுதவி பெறும் 55 மறுவாழ்வு மையங்கள் மற்றும் 5 இல்லங்கள் செயல்பட்டு வருவதாக தகவல்

    இதனையடுத்து தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் தொண்டு நிறுவனங்கள் மூலம் 55 மனநலம் பாதித்தோருக்கான மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    மேலும், மனநலம் பாதித்து குணமடைந்தோருக்கு வேலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி மற்றும் மதுரையில் ஐந்து இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்காதது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா

    தமிழ்நாடு

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு மாவட்ட செய்திகள்
    இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர் விரைவு சாலை
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025