NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

    2024 நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலுக்கு முடிவுரை?- எம்பி சசி தரூர் விளக்கம்

    எழுதியவர் Srinath r
    Dec 29, 2023
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தன் வாழ்வின் இறுதி தேர்தலாக இருக்கலாம் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், அரசியலில் இறுதி முடிவு என்று எதுவும் இல்லை என கூறினார்.

    "ஒரு கட்டத்தில், இளைஞர்களுக்கு இடமளிக்கும் நேரம் வரும் என்று நான் நம்புகிறேன். அதுதான் என் எண்ணம்" என பேசியவர், உடனே, அரசியலில், 'எப்போதும் வேண்டாம் என்று சொல்லாதே' என்ற மற்றொரு முழக்கமும் உள்ளது" என விவரித்தார்.

    2nd card

    "மக்களுக்காக என்னால் இயன்றதைச் செய்வேன்"

    அண்மையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலே தனது இறுதி தேர்தலாக இருக்கும் என தரூர் பேசியதால், அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    "நான் ஒருபோதும் உறுதியாக சொல்லவில்லை, இது எனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று நான் கூறினேன்," என 67 வயதான எம்பி தெளிவுபடுத்தினார்.

    திருவனந்தபுரத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டால், அது அவருக்கு கடைசி தேர்தல் போல கடுமையாக போட்டியிட்டு, முழு மனதுடன், மக்களுக்காக தன்னால் இயன்றதைச் செய்வதாக தெரிவித்தார்.

    3rd card

    திருவனந்தபுரத்தில் தொடர்ந்து மூன்று முறை வென்றவர்

    திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம், தனது ஒரு தசாப்தத்திற்கும் மேலான அரசியல் வாழ்வை தரூர் தொடங்கினார்.

    தனது முதல் தேர்தலிலேயே, சிபிஐயின் ராமச்சந்திரன் நாயரை, 95,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றார்.

    அதன் பின்னர் தோல்வியை சந்திக்காத தரூர், 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    திருவனந்தபுரம்
    சிபிஐ
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    காங்கிரஸ்

    ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம் இந்தியா
    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ்  மகளிர் ஆணையம்
    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக  தெலுங்கானா

    திருவனந்தபுரம்

    திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன? விமான சேவைகள்
    7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை கேரளா
    கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு கேரளா

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    நாடாளுமன்றம்

    கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் திரிணாமுல் காங்கிரஸ்
    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு திரிணாமுல் காங்கிரஸ்
    புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மக்களவை
    மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள் மக்களவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025