உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 06) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 06) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்: சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தாபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், செங்கத்துறை, கடம்பாடி, ஏரோ நகர், மதிமயக்கன் நகர்.
உடுமலைப்பேட்டை: உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா பகுதி, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குவார்ட்டர்ஸ், மார்க்கெட், எஸ்.வி.புரம், பழப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
அரியலூர் மாவட்டம்: விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணப்பாடி, தாத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி.
தஞ்சாவூர் மாவட்டம்: மாரியம்மன்கோவில், போஸ்டல் காலனி, காட்டூர்.
கடலூர் மாவட்டம்: கேப்பர் ஹில்ஸ் (Capper Hills), எம்.புதூர், சுத்துகுளம், செல்லங்குப்பம், வண்டிப்பாளையம், பாதிரிக்குப்பம்.