NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை
    பண மோசடி செய்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்

    சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022
    02:14 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் வாங்கிய ரூ.150 கோடி கடனுக்காக, சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கடந்த ஜூலை மாதம் முடக்கப்பட்டது.

    வங்கியில் கடன் வாங்க கூறப்பட்ட காரணங்களுக்கு பதிலாக, பணத்தை வேறு விதத்தில் முதலீடு செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதே போல் ரூ.120 கோடி-யை இந்தியன் வங்கியில் கடனாக பெற்று, அதன் நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தினால் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையினை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்து நடவடிக்கையினை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை நடவடிக்கை

    தனியார் வங்கியில் ரூ,66 கோடியே 93 லட்சம் மோசடி செய்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்

    இதனை தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அமலாக்கத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    இதனையடுத்து தான் முன்னதாக அவர்களது ரூ.235 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

    இந்நிலையில் தற்போது, தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியை ஏமாற்றி சட்டவிரோதமாக மீண்டும் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டதையடுத்து,

    சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.66 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? ஸ்டாலின்
    17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியா
    தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை! விவரக்குறிப்புகள்
    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025