NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி
    இந்தியா

    மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி

    மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி
    எழுதியவர் Nivetha P
    Dec 22, 2022, 07:00 pm 1 நிமிட வாசிப்பு
    மதுரையில் உலக தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்க் கூடல்' நிகழ்ச்சி
    'தமிழ் கூடல்' நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ் அறிஞர்கள்

    மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் செயல்பட்டு வரும் 'தமிழ் தந்த அறக்கட்டளை' சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 'தமிழ் கூடல்' நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் பண்டைய தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகள் குறித்து பேசப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10ற்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர். அதன்படி, ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரியும் தற்போது ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராக இருந்து வரும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் மதுரை மற்றும் தமிழுக்கான அதன் பங்களிப்பு குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வைகை நதியை சங்க இலக்கியங்களில் காதல் நதியாக பலர் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.

    புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்து சுபாஷினி கனகசுந்தரம்

    அதனை தொடர்ந்து மதுரையில் உள்ள பல சிறு ஆறுகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டினார். மேலும், திருக்குறளும், சங்க இலக்கியங்களும் வளமான வாழ்விற்கு வழி வகுக்கும் என்றும் அவர் கூறினார். அவரை தொடர்ந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்தும், அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தமிழக பாரம்பரிய அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி கனகசுந்தரம் பேசினார். அவர் பேசுகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள் என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளது, ஆனால் அவர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    வைரல் செய்தி

    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி ஜம்மு காஷ்மீர்
    லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? தமிழ்நாடு
    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி நடிகர் அஜித்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023