NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையின் துணை மேயர் வீடு, ஆபிஸ் மீது தாக்குதல்; இருவர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையின் துணை மேயர் வீடு, ஆபிஸ் மீது தாக்குதல்; இருவர் கைது
    ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு விசாரணை கோரி எம்.பி., வெங்கடேசன் தர்ணா

    மதுரையின் துணை மேயர் வீடு, ஆபிஸ் மீது தாக்குதல்; இருவர் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 10, 2024
    08:20 am

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகராஜன்.

    இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இவரது வீட்டை, 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று, அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சூழ்ந்தனர்.

    தொடர்ந்து, வீட்டிற்குள் இருந்த நாகராஜன் மற்றும் அவரின் மனைவியை தாக்குவதற்காக, வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.

    ஆனால், வீட்டின் வாசல் கதவு திறக்காததால், அந்தக்கும்பல் முன்பக்கம் இருந்த இரும்பு கேட்டை ஆயுதங்களால் சேதப்படுத்திவிட்டு, வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் உள்ளிட்ட இரண்டு டூவீலர்களை அடித்து சேதப்படுத்தி உள்ளது.

    card 2

    இருவரை கைது செய்துள்ளது காவல்துறை

    வாகனங்களை சேதப்படுத்திய பின்னர், அந்த கும்பல், எதிரிலுள்ள அவரது அலுவலக கதவையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

    உடனே நாகராஜன், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா்.

    இதுபற்றி தகவல் அறிந்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் துணை மேயர் வீடு முன்பு திரண்டனர்.

    மேலும், கட்சி தொண்டர்கள் பலரும், ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இந்த சூழலில், இந்த சம்பவம் குறித்து விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    காவல்நிலையத்தை முற்றுகையிட்ட CPI-M கட்சியினர்

    மதுரை துணை மேயர் நாகராஜன் மீது கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய இருவர் கைது. கூலிப்படையை ஏவி விட்ட சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தை #CPIM தோழர்களும் பொதுமக்களும் முற்றுகையிட்டு போராட்டம். pic.twitter.com/O665NlYWDr

    — CPIM Tamilnadu (@tncpim) January 9, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்

    மதுரை

    இயக்குனர் சசிக்குமார்- தமிழ் சினிமாவின் சைலன்ட் வின்னர் நடிகர்
    மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு  எய்ம்ஸ்
    மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம் சென்னை
    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் சென்னை

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

    'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்  கேரளா
    மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கே.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாள்  கேரளா
    சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார் உயர்கல்வித்துறை
    அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025