NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்

    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 

    எழுதியவர் Nivetha P
    May 15, 2023
    02:45 pm

    செய்தி முன்னோட்டம்

    நாகர்கோவில் மாவட்டம் அருகேயுள்ள கணபதிபுரம் தெற்கு ஊரில் வசித்து வருபவர் முருகன்.

    இவர் நிதி நிறுவனம் ஒன்றினை தற்போது நடத்தி வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் 4 ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை மாலை தனது நிதி நிறுவனத்தினை மூடிவிட்டு சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் முருகனின் வீடு மற்றும் நிதி நிறுவனத்தின் பூட்டுகளை உடைத்து சுமார் 100 சவரன் நகையினையும், வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்க பணத்தினையும் கொள்ளை அடித்து சென்றதாக புகார் தெரிவிக்கிறது.

    மேலும் அவர்கள் காவல்துறை மோப்பநாய் கொண்டு கண்டுபிடிக்க முடிக்காமல் இருக்க வீடு மற்றும் நிதி நிறுவனத்தில் மிளகாய் பொடியினை தூவி சென்றுள்ளார்கள்.

    கொள்ளை 

    கைரேகை நிபுணர்கள் கொண்டு காவல்துறை விசாரணை 

    தொடர்ந்து, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கினையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளார்கள்.

    இதனையடுத்து இன்று(மே.,15) காலை அந்நிறுவனத்தின் ஊழியர்கள் நிறுவனத்தை திறக்க வந்த பொழுது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும், மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

    அதன்படி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி பிரசாத், கன்னியாகுமரி துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா முதலானோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளார்கள்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் உதவி கொண்டு காவல்துறை தீவிர விசாரணையினை இது குறித்து நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாகர்கோவில்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நாகர்கோவில்

    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் தமிழ்நாடு
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி கோவை
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது தென்காசி
    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்  கொரோனா

    காவல்துறை

    சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை சென்னை
    காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை  சென்னை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம்: CBCIDயின் FIR அறிக்கை வெளியீடு  திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: 3 பேரின் ரத்தமாதிரிகள் சேகரிப்பு; தரமறுத்த 8 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தமிழ்நாடு

    காவல்துறை

    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி இந்தியா
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு  மேற்கு வங்காளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025