NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 

    எழுதியவர் Nivetha P
    May 15, 2023
    02:45 pm
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 
    நாகர்கோவில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை-மிளகாய் பொடி தூவி தப்பிச்சென்ற மர்ம நபர்கள்

    நாகர்கோவில் மாவட்டம் அருகேயுள்ள கணபதிபுரம் தெற்கு ஊரில் வசித்து வருபவர் முருகன். இவர் நிதி நிறுவனம் ஒன்றினை தற்போது நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 4 ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை மாலை தனது நிதி நிறுவனத்தினை மூடிவிட்டு சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் முருகனின் வீடு மற்றும் நிதி நிறுவனத்தின் பூட்டுகளை உடைத்து சுமார் 100 சவரன் நகையினையும், வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் ரொக்க பணத்தினையும் கொள்ளை அடித்து சென்றதாக புகார் தெரிவிக்கிறது. மேலும் அவர்கள் காவல்துறை மோப்பநாய் கொண்டு கண்டுபிடிக்க முடிக்காமல் இருக்க வீடு மற்றும் நிதி நிறுவனத்தில் மிளகாய் பொடியினை தூவி சென்றுள்ளார்கள்.

    2/2

    கைரேகை நிபுணர்கள் கொண்டு காவல்துறை விசாரணை 

    தொடர்ந்து, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கினையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளார்கள். இதனையடுத்து இன்று(மே.,15) காலை அந்நிறுவனத்தின் ஊழியர்கள் நிறுவனத்தை திறக்க வந்த பொழுது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும், மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்கள். அதன்படி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி பிரசாத், கன்னியாகுமரி துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா முதலானோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் உதவி கொண்டு காவல்துறை தீவிர விசாரணையினை இது குறித்து நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நாகர்கோவில்
    காவல்துறை
    காவல்துறை

    நாகர்கோவில்

    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்  கொரோனா
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது தென்காசி
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி கோவை
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள் இந்தியா

    காவல்துறை

    சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த சென்னை மாணவி  சென்னை
    சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட் இந்தியா
    ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்  ஈரோடு
    கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை கடற்கரை

    காவல்துறை

    பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்  காவல்துறை
     கர்நாடகாவில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த கிராம மக்கள்  கர்நாடகா
    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023