NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல்
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல்

    எழுதியவர் Nivetha P
    Mar 01, 2023
    12:51 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 7பேரில் ஏஜி பேரறிவாளன் கடந்த ஆண்டு மே மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

    அவரையடுத்து நளினி, டி.சுதேந்திரராஜா என்னும் சாந்தன், ஸ்ரீ ஹரன் என்னும் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவி ஆகியோர் நவம்பர் 11ம்தேதி விடுவிக்கப்பட்டனர்.

    இதில் நளினியின் கணவரான முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு இலங்கையர்களை தவிர்த்து மற்றவர்கள் விடுதலையானார்கள்.

    மீதமுள்ள இவர்கள் நால்வர் நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து அரசாங்கத்தின் முடிவு நிலுவையில் உள்ளதால் சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

    இந்த விவகாரம் குறித்து சென்னை உள்பட சிலவட்டாரங்கள், தமிழகஅரசு காகித வேலைகளில் இழுபறிப்பு செய்வதால் அவர்கள் அங்கிருந்து புறப்படுவது தாமதமாகிறது என்ற கருத்தினை தெரிவித்துவருகிறார்கள்.

    ஆவணங்கள் பரிசீலனை

    இந்தியாவை விட்டு வெளியேற உதவக்கோரி தமிழக முதல்வருக்கு கடிதம்

    இந்த நால்வருள் ஒருவரான சாந்தன் மட்டும் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில் அவரது ஆவணங்கள் மீதான பரிசீலனை நிலுவையில் உள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து, முருகன், பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஐரோப்பியா நாடுகளில் நெருங்கிய உறவினர்கள் உள்ளதால் அவர்கள் அங்குச்செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

    பயஸ் தனது தாயும், சகோதரியும் வசிக்கும் சுவிட்சலாந்திற்கு அல்லது அவரது மகன் வசிக்கும் நெதர்லாந்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவர் இந்தியாவை விட்டு வெளியேற உதவக்கோரி தமிழக முதல்வருக்கு இரண்டுமுறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாமல் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் ஆவணங்கள் பரிசீலனைக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை கேரளா
    பிப்ரவரி 25க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்
    சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி! விளையாட்டு
    பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் திரௌபதி முர்மு

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025