NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல்
    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் விநியோகம்

    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல்

    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

    இதனை அனைத்து தர மக்களும் கொண்டாட ஏதுவாக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.

    அதன்படி, இந்தாண்டும் தற்போது ஆட்சியிலுள்ள திமுக'வினர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இந்த பரிசு பொருட்களை பெறுவதற்கான டோக்கன்கள் நாளை முதல் ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஜனவரி 12ம் தேதி வரை பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்

    ஜனவரி 9ம் தேதி முதல்வர் பரிசுத்தொகுப்பு வழங்குவதை துவக்கி வைக்கிறார்

    நியாய விலைக்கடைகளில் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பரிசு பொருட்களை வாங்கி செல்லவே இந்த டோக்கன் விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    வீடு வீடாக சென்று இந்த டோக்கன்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    கொடுக்கப்படும் டோக்கன்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நேரம், தேதி முதலியன குறிப்பிடப்பட்டிருக்கும்.

    அதன் படி, மக்கள் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசினை பெற்றுக்கொள்ளலாம்.

    இதனை தொடர்ந்து, ஜனவரி 9ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகுப்பினை மக்களுக்கு வழங்கி துவக்கி வைக்கவுள்ளார்.

    ஜனவரி 12ம் தேதி வரை பொதுமக்கள் பரிசுத்தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பொங்கல் பரிசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் சென்னை
    மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை! கொரோனா
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! அரசியல் நிகழ்வு

    பொங்கல் பரிசு

    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் மு.க.ஸ்டாலின்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025