பொது தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி அளித்த 5 பெரிய வாக்குறுதிகள்
செய்தி முன்னோட்டம்
அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தனது சுதந்திர தின உரையில், 5 பெரிய வாக்குறுதிகளை குடிமக்களுக்கு வழங்கியுள்ளார்.
விஸ்வகர்மா திட்டம்
13,000-15,000 கோடி ஒதுக்கீட்டில் பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்காக விஸ்வகர்மா திட்டத்தை தனது அரசு அடுத்த மாதம் தொடங்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
துணி துவைப்பவர்கள், பொற்கொல்லர்கள், முடிதிருத்துபவர்கள் போன்ற திறமையான தொழிலாளர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
மலிவு விலையில் மருந்துகள்
ஜன் ஔஷதி கேந்திராக்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த தனது அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அனைவருக்கும் பொதுவான மருந்துகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்காக 'ஜன் ஔஷதி கேந்திரங்கள்' அமைக்கப்பட்டன.
டிலேஜ்ஜிக்கேன்
நகரங்களில் சொந்த வீடு
நகரங்களில் சொந்த வீடு வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் இன்று அறிவித்தார்.
நகரங்களில் வசிக்கும், சொந்த வீடு இல்லாத நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் வங்கிக் கடன்களில் நிவாரணம் அளிக்கும்.
நாட்டின் பொருளாதாரம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம்பிடிக்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
பணவீக்கம் மற்றும் விலைவாசி
பணவீக்கத்தை சமாளிக்கவும், விலைவாசி உயர்வை குறைக்கவும் அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் தனது அரசு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்றும், அதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.