Loading...
100 வாரங்கள், பிரம்மாண்ட விழிப்புணர்வு! போதையற்ற இளைஞர்கள் தேசிய இயக்கத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 'போதையற்ற இளைஞர்கள்' இயக்கத்தைத் தொடக்கி வைத்தார்

100 வாரங்கள், பிரம்மாண்ட விழிப்புணர்வு! போதையற்ற இளைஞர்கள் தேசிய இயக்கத்தைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2026
11:22 am

செய்தி முன்னோட்டம்

நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும், அவர்களை சமுதாய மாற்றத்திற்கான தூதர்களாக மாற்றும் நோக்கிலும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதையற்ற இளைஞர்கள் (Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan) என்ற பிரம்மாண்ட இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தார். நாடு தழுவிய அளவில் மக்கள் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த போதை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கம் அடுத்த 100 வாரங்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

சிறப்பு நிகழ்வுகள்

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு நிகழ்வுகள்

இந்த 100 வாரப் பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

விளையாட்டு & உடற்பயிற்சி: விளையாட்டுப் போட்டிகள், நடைப்பயணங்கள் (Walkathons) மற்றும் யோகா/தியானப் பயிற்சிகள்.

கலாச்சார நிகழ்வுகள்: வீதி நாடகங்கள், கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு விவாத மன்றங்கள்.

சமூக விழிப்புணர்வு: கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொதுமக்களுடன் நேரடியாக இணைந்து போதைப் பழக்கத்தின் தீமைகளை எடுத்துரைக்கும் விழிப்புணர்வுப் பிரசாரங்கள்.

பங்களிப்பு

ஆன்மீக அமைப்புகள் மற்றும் இளைஞர்களின் மாபெரும் பங்களிப்பு

இந்தத் தேசிய இயக்கத்தில் இளைஞர் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகளின் இளைஞர் பிரிவுகள் என பல்வேறு தரப்பினரும் ஒரே தளத்தில் இணைந்துள்ளனர்.

நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து இளைஞர்கள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும், 125க்கும் மேற்பட்ட முன்னணி ஆன்மீக அமைப்புகள், மை பாரத் தன்னார்வலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் காணொலி வாயிலாக இதில் இணைந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

ADVERTISEMENT