NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்
    இந்தியா

    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்

    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்
    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022, 10:30 pm 0 நிமிட வாசிப்பு
    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்
    நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

    திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த பகுதியின் சாலை ஓரங்களில் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுவவதாக தகவல்கள் வந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வழியாக செல்லும் மக்கள் புகார்களை அளித்தனர். மேலும் நெடுஞ்சாலை ஓரம் இந்த குப்பைகள் எரிக்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதாகவும், அப்பகுதியாக செல்வோருக்கு மூச்சு திணறல் ஏற்படும் சம்பவங்கள் ஏற்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து தண்டலை ஊராட்சி நிர்வாகம் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி, அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட தடை விதித்து, வேலியும் அமைத்தது.

    மருத்துவ கழிவுகள் கொட்டியது குறித்து தண்டலை ஊராட்சி மன்றம் விசாரணை

    மேலும் இது குறித்து தண்டலை ஊராட்சி நடத்திய விசாரணையில், திருவாரூர் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை 43 கோணிப்பைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தண்டலை ஊராட்சி தலைவர் நாகராஜன், அந்த மருத்துவமனைக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும், இல்லையெனில் காவல் துறை மூலம் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். பல ஆண்டுகளாக அந்த இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்துள்ளதாகவும், எதிர்ப்பு தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஒரு சமூக ஆர்வலர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    அதிரடியாக 2,200 பேர் பணிநீக்கம் செய்த Indeed நிறுவனம்! காரணம் என்ன? ஆட்குறைப்பு
    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரல் செய்தி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு இந்தியா
    வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27 புதுச்சேரி
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்

    வைரல் செய்தி

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கருத்து கூறி, மாட்டிக்கொண்ட இயக்குனர் அமீர்! வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ
    இந்தியாவில் முதல்முறையாக 'Music Entrepreneurship' துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி கோலிவுட்
    நீண்ட ஆயுளுக்கான 'ரகசியத்தை' வெளிப்படுத்திய 108 வயது லண்டன் பாட்டி ஆரோக்கியம்
    "39 ஆண்டுகளுக்கு பிறகும், அதே குரல், அதே கனிவு": பாடகி சித்ராவை பாராட்டிய கவிஞர் வைரமுத்து வைரலான ட்வீட்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023