NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்
    நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம்

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022
    10:30 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    அந்த பகுதியின் சாலை ஓரங்களில் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்படுவவதாக தகவல்கள் வந்தது.

    இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வழியாக செல்லும் மக்கள் புகார்களை அளித்தனர்.

    மேலும் நெடுஞ்சாலை ஓரம் இந்த குப்பைகள் எரிக்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதாகவும், அப்பகுதியாக செல்வோருக்கு மூச்சு திணறல் ஏற்படும் சம்பவங்கள் ஏற்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இதனையடுத்து தண்டலை ஊராட்சி நிர்வாகம் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி, அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட தடை விதித்து, வேலியும் அமைத்தது.

    மருத்துவமனைக்கு நோட்டிஸ்

    மருத்துவ கழிவுகள் கொட்டியது குறித்து தண்டலை ஊராட்சி மன்றம் விசாரணை

    மேலும் இது குறித்து தண்டலை ஊராட்சி நடத்திய விசாரணையில், திருவாரூர் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனை 43 கோணிப்பைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டியது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தண்டலை ஊராட்சி தலைவர் நாகராஜன், அந்த மருத்துவமனைக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும்,

    இல்லையெனில் காவல் துறை மூலம் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

    பல ஆண்டுகளாக அந்த இடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்துள்ளதாகவும், எதிர்ப்பு தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஒரு சமூக ஆர்வலர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    2023 ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நிச்சயம் நடக்குமா? - தமிழக அரசு அறிவிப்பு இந்தியா
    17ஆம் தேதி வரை வெளுத்து கட்டப்போகும் மழை! வானிலை அறிக்கை
    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் இந்தியா
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? ஸ்டாலின்

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை டிரெண்டிங்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025