NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம் 
    அமெரிக்கா மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம்

    அமெரிக்க மகனுக்கு மதுரையில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திய பெற்றோர் - நெகிழ்ச்சி சம்பவம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 02, 2023
    04:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள பன்னிக்குண்டு கிராமத்தினை சேர்ந்தவர்கள் சுதாகர்-ஜெயபுவனா தம்பதி.

    இவர்கள் இருவரும் அமெரிக்கா கலிபோர்னியா நகரில் குடியுரிமை பெற்று சுதாகர் அங்கு மென் பொறியாளராகவும், ஜெயபுவனா அந்த நாட்டின் அரசு பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

    இவர்களுக்கு மனு என்னும் ஒரே ஒரு மகன் இருக்கிறார்.

    அவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிலையில், தற்போது அவருக்கு வயது 22 ஆகிறது.

    இந்நிலையில், அந்த குடும்பம் கடந்த வாரம் தங்கள் சொந்த ஊரான மதுரைக்கு வந்துள்ளது.

    இதனையடுத்து தமிழகத்தின் கலாச்சாரம், சொந்தபந்தங்கள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றை தங்கள் அமெரிக்கா மகனுக்கு அறிவுறுத்த நினைத்த பெற்றோர் கலாச்சார விழா ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது.

    விழா 

    பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் அரங்கேறியது 

    இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 நாட்களுக்கு முன்னரே தங்களது அனைத்து சொந்தப்பந்தங்களுக்கும் இந்த கலாச்சார விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    மேலும், திருமங்கலம் அருகேயுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த விழாவினை நடத்த முடிவுச்செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

    அதன்படி, இன்று(ஜூலை.,2)அரங்கேறிய இவ்விழாவில் சொந்தபந்தங்கள் கலந்துகொண்டு, தமிழக பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீர் ஊர்வலம், தாய்மாமன் மாலை அணிவிக்கும் நிகழ்வு, உள்ளிட்ட செய்முறைகளை செய்தனர்.

    பின்னர், தங்கள் உறவினர்கள் அனைவரையும் தங்கள் மகனுக்கு அந்த பெற்றோர் அறிமுகப்படுத்தினர்.

    இதனையடுத்து, இவ்விழாவில் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

    இதன்மூலம் அந்த அமெரிக்க மகன் நெகிழ்ச்சியடைந்த நிலையில், தங்கள் மகனுக்கு தமிழக பாரம்பரியத்தினை அறிமுகப்படுத்தியதில் அந்த பெற்றோர் மனத்திருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மதுரை

    மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை தமிழ்நாடு
    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை காவல்துறை
    சென்னையில் போல மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் ரயில்கள்

    அமெரிக்கா

    தேசிய கூடைப்பந்து லீக்கில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோனார் மெக்ரிகோர் காவல்துறை
    அமெரிக்க ட்ரோன் ஒப்பந்தம்: இந்தியாவிற்கு என்னென்ன ட்ரோன்கள் கிடைக்கும் இந்தியா
    சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் சீனா
    சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025