NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம விருதும் ஒன்று.

    இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த குடியரசு தினத்தன்று 106 பேருக்கு இந்த பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது.

    கடந்த 22ம் தேதி டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இந்த பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் அனைவருக்கும் அளித்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.

    தமிழக முதல்வர்

    குடும்பத்தோடு தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து

    இதனை தொடர்ந்து, இருளர் பழங்குடியினத்தின் பாம்புப்பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு ஜனாதிபதி பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவப்படுத்தினார்.

    இந்த பாம்புப்பிடி வீரர்கள் செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேறி என்னும் கிராமத்தினை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இவர்கள் இருவருமே மிகவும் அபாயகரமான மற்றும் கொடிய விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள் ஆவர்.

    இந்நிலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர்கள் இரண்டு பேரும் தங்களது குடும்பத்தோடு இன்று(மார்ச்.,24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பத்மஸ்ரீ விருது
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்

    பத்மஸ்ரீ விருது

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு திரௌபதி முர்மு
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! திரௌபதி முர்மு
    பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது! குடியரசு தினம்
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் திரௌபதி முர்மு

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை

    தமிழ்நாடு

    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி மாவட்ட செய்திகள்
    சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு சென்னை
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்டாலின்
    2023-24ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான முக்கியத்துவம் பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025