NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்
    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத்

    எழுதியவர் Nivetha P
    Jan 25, 2023
    06:40 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரி திருவட்டார் அருகேயுள்ள மனக்காவிளையை சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக'விற்காக பரப்புரை செய்த இவர், தற்போதும் திமுக மீதான விமர்சனங்களுக்கு இணையத்தளம் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.

    இவருக்கு நரம்பியல் ரீதியான பிரச்சனை இருப்பதால், அவ்வப்போது உடல்நல பாதிப்பிற்கு உட்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

    வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, இன்று(ஜன.,25) அதிகாலை உடல்நலம் மோசமடைந்துள்ளது.

    இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொலைபேசி வாயிலாக பேசினார்

    நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் தமிழக முதல்வர்

    இது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திமுக'வினர் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து உடனடியாக நாஞ்சில் சம்பத்'தின் மகனான மருத்துவர் சரத் பாஸ்கரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர், நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் அவரது குடும்பத்திற்கு தைரியம் அளித்தார் என்று செய்திகள் வெளியானது.

    தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களையும், மாநகராட்சி மேயர் மகேஷையும் தமிழக முதல்வர் தொடர்பு கொண்டார்.

    அவர்களிடம் நாஞ்சில் சம்பத்'திற்கு உரிய அறுவை சிகிச்சை அளிக்க தேவையான உதவிகளை செய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க.ஸ்டாலின்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    மு.க.ஸ்டாலின்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025