NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
    இந்தியா

    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

    எழுதியவர் Nivetha P
    March 10, 2023 | 01:18 pm 1 நிமிட வாசிப்பு
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

    தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்புசத்து மற்றும் போலிக்ஆசிட் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளி ஆசிரியர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 249 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 6ம் தேதி மாத்திரைகள் கையில் கிடைத்துள்ளது. யார் அதிக மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள் என்னும் போட்டி மாணவ-மாணவிகள் இடையே ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்படி 8ம் வகுப்பு மாணவிகள் 4, 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அந்த மாத்திரைகளை போட்டிப்போட்டு சாப்பிட்டுள்ளார்கள். அதில் அவர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதோடு மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

    தலைமை ஆசிரியர் மற்றும் கண்காணிப்பாளரும் ஆசிரியருமான கலைவாணி பணியிடை நீக்கம்

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த 6 மாணவ-மாணவிகளை ஊட்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். மாணவிகள் ஒவ்வொருவரும் 30முதல் 60மாத்திரைகள் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகள் உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால் மேல்சிகிச்சைக்காக அவர்களை கோவைஅரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிரச்சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சலீம் என்பவரது மகள் ஜெய்பா பாத்திமா என்னும் மாணவியின் உடல்நிலை மிகமோசமானதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சேலம் தாண்டி செல்லும்போதே திடிரென அந்த மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிவழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமதுஅமீன்,மாத்திரை விநியோகிக்கும் கண்காணிப்பாளரும் ஆசியருமான கலைவாணி ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஊட்டி
    ஊட்டி
    பள்ளி மாணவர்கள்
    தமிழ்நாடு

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி
    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  கோவை

    ஊட்டி

    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  தமிழ்நாடு
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்  ஊட்டி
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் ஊட்டி

    பள்ளி மாணவர்கள்

    தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா

    தமிழ்நாடு

    சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேண்ட்? கிரிக்கெட்
    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு அமைச்சரவை
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் ராமநாதபுரம்
    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023