NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

    எழுதியவர் Nivetha P
    Mar 10, 2023
    01:18 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்புசத்து மற்றும் போலிக்ஆசிட் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளி ஆசிரியர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 249 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த 6ம் தேதி மாத்திரைகள் கையில் கிடைத்துள்ளது.

    யார் அதிக மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள் என்னும் போட்டி மாணவ-மாணவிகள் இடையே ஏற்பட்டதாக தெரிகிறது.

    அதன்படி 8ம் வகுப்பு மாணவிகள் 4, 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அந்த மாத்திரைகளை போட்டிப்போட்டு சாப்பிட்டுள்ளார்கள்.

    அதில் அவர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதோடு மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

    மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்

    தலைமை ஆசிரியர் மற்றும் கண்காணிப்பாளரும் ஆசிரியருமான கலைவாணி பணியிடை நீக்கம்

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அந்த 6 மாணவ-மாணவிகளை ஊட்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

    மாணவிகள் ஒவ்வொருவரும் 30முதல் 60மாத்திரைகள் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மாணவிகள் உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால் மேல்சிகிச்சைக்காக அவர்களை கோவைஅரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிரச்சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் சலீம் என்பவரது மகள் ஜெய்பா பாத்திமா என்னும் மாணவியின் உடல்நிலை மிகமோசமானதால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

    சேலம் தாண்டி செல்லும்போதே திடிரென அந்த மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிவழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமதுஅமீன்,மாத்திரை விநியோகிக்கும் கண்காணிப்பாளரும் ஆசியருமான கலைவாணி ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஊட்டி
    பள்ளி மாணவர்கள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு

    தமிழ்நாடு

    மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மதுரை
    வானிலை அறிக்கை: மார்ச் 2- மார்ச் 6 வானிலை அறிக்கை
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி
    கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025