NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி
    யானைகளின் அட்டகாசத்தால் அடுத்தடுத்து இரண்டு நபர்கள் பலி

    கோயம்புத்தூரில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து பலி

    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று, (மார்ச் 1), கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டியில் யானை தாக்கி மீண்டும் ஒரு நபர் இறந்து போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சில நாட்களுக்கு முன்பு தான் யானையால் தாக்கப்பட்டு ஒரு நபர் இறந்த சம்பவத்தின் தாக்கம் குறையாத நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு சமபவம் நடந்துள்ளது.

    இறந்த நபரின் பெயர் மருதாசலம், இவர் வயது 67 மற்றும் இவர் களக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனைகட்டியின் தெற்கு வனப்பகுதியில் இருந்து 1,500 மீட்டர் தொலைவில் இறந்து கிடந்தார்.

    யானை

    மூன்றுக்கு மேற்பட்ட யானைகள் தாக்கி இருக்கலாம்

    யானைகளால் தாக்கப்பட்டு இறந்த மருதாசலம், காலை 7 மணியளவில் வழக்கம் போல காலைகடன்களை கழிக்க, வனப்பகுதிக்கு அருகில் சென்றார்.

    அந்நேரத்தில் அப்பகுதியில் மூன்று யானைகள் இருந்ததாகவும், அவற்றில் எத்தனை யானைகள் முதியவரைத் தாக்கின என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் தலைமையிலான குழுவினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வரைந்தனர்.

    அதன் பிறகு, தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கு முன்பு 36 வயதான நபர் இதே போல யானை தாக்கப்பட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா சென்னை
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025