NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    இந்தியா

    வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

    வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    எழுதியவர் Nivetha P
    Jan 02, 2023, 12:24 pm 1 நிமிட வாசிப்பு
    வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    சொர்க்கவாசல் திறப்பு வைபவம்

    இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் என கூறப்படும் சொர்க்கவாசல் திறப்பு மிக சிறப்பாக அரேங்கேறியது. பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 22ம் தேதி முதல் விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருநெடுந்தாண்டகம் என்னும் நிகழ்ச்சியோடு துவங்கிய இவ்விழாவில் பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வந்தது. இதனை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்தாம் நாளான நேற்று பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற்றது.

    பக்தி பரவசத்தில் 'ராமா, கோவிந்தா' என்று கோஷமிட்ட ஏராளமான பக்தர்கள்

    இரவு முதல் ரங்கநாதர் கோயிலில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், பரவசத்துடன் 'ரங்கா, கோவிந்தா' என்று கோஷமிட்டனர். ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருகொட்டகையில் எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இம்முறை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டாம் என்பது உச்சநீதிமன்ற முடிவு - மத்திய அமைச்சர் விளக்கம் உச்ச நீதிமன்றம்
    மற்றுமொரு முக்கோண காதல் கதையா? லைக்காவின் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம் திரைப்பட அறிவிப்பு
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் ராகுல் காந்தி

    தமிழ்நாடு

    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை கடலூர்
    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023