NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    சொர்க்கவாசல் திறப்பு வைபவம்

    வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது

    எழுதியவர் Nivetha P
    Jan 02, 2023
    12:24 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் என கூறப்படும் சொர்க்கவாசல் திறப்பு மிக சிறப்பாக அரேங்கேறியது.

    பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 22ம் தேதி முதல் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    திருநெடுந்தாண்டகம் என்னும் நிகழ்ச்சியோடு துவங்கிய இவ்விழாவில் பகல் பத்து நிகழ்ச்சி நடந்து வந்தது.

    இதனை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பத்தாம் நாளான நேற்று பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற்றது.

    சென்னை பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு

    பக்தி பரவசத்தில் 'ராமா, கோவிந்தா' என்று கோஷமிட்ட ஏராளமான பக்தர்கள்

    இரவு முதல் ரங்கநாதர் கோயிலில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், பரவசத்துடன் 'ரங்கா, கோவிந்தா' என்று கோஷமிட்டனர்.

    ஆயிரங்கால் மண்டபத்திற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள திருகொட்டகையில் எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இங்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இம்முறை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! அரசியல் நிகழ்வு
    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை சென்னை
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி அதிமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025