NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை
    இந்தியா

    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை

    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை
    எழுதியவர் Nivetha P
    Jan 18, 2023, 02:40 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை
    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - ஆளுநர் தமிழிசை

    புதுச்சேரி மாவட்டம், ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150வது பிறந்தநாள்விழா மற்றும் காணும் பொங்கல் விழா முதலியன புதுவை ஆளுநர் மாளிகையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி ஆளுநர் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், "சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பாரதியார் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார். மேலும், விடுதலை போராட்டத்தின்பொழுது பாரதியார், வாஞ்சிநாதன், அரவிந்தர் போன்றோருக்கு புதுச்சேரி தாயின் மடிபோல் அரவணைத்தது என்றும், ஆரோ நகரில் 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டதாகவும், இத்தனை ஆண்டுகள் கழிந்தும் 3 ஆயிரம் குடும்பங்கள் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதையெல்லாம் சரிசெய்ய தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    'தமிழ்நாடு என்னும் பெயருக்கு பெரும் சரித்திரம் இருக்கிறது' - புதுவை ஆளுநர் தமிழிசை

    தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்னும் பெயருக்கு பெரும் சரித்திரம் இருக்கிறது, பல போராட்டத்திற்கு பிறகே இந்த பெயர் கிடைத்தது. அதனை அவ்வளவு எளிதாக புறம் தள்ளிவிட முடியாது என்று கூறினார். மேலும், 'நான் மக்களுக்காக தான் செயல்படுகிறேன். கோப்புகளை மக்கள் முகங்களாகவே நான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ரூ.1000 அறிவிக்கப்பட்டு இன்னும் அளிக்கப்படாதபட்சத்தில், புதுவையில் முதல்வருடன் சேர்ந்து வழங்க உள்ளதாக கூறியுள்ளார். மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுவையில் பார்க்கப்படுவதில்லை என்று கூறிய அவர், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர்கள், ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    புதுவை

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    புதுவை

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 தமிழ்நாடு
    யூடியூப் வீடியோக்கள் பார்த்து வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள் கைது இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023