NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை
    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - ஆளுநர் தமிழிசை

    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை - பொங்கல் விழாவில் ஆளுநர் தமிழிசை

    எழுதியவர் Nivetha P
    Jan 18, 2023
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுச்சேரி மாவட்டம், ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150வது பிறந்தநாள்விழா மற்றும் காணும் பொங்கல் விழா முதலியன புதுவை ஆளுநர் மாளிகையில் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி ஆளுநர் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், "சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பாரதியார் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார்.

    மேலும், விடுதலை போராட்டத்தின்பொழுது பாரதியார், வாஞ்சிநாதன், அரவிந்தர் போன்றோருக்கு புதுச்சேரி தாயின் மடிபோல் அரவணைத்தது என்றும், ஆரோ நகரில் 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டதாகவும், இத்தனை ஆண்டுகள் கழிந்தும் 3 ஆயிரம் குடும்பங்கள் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையெல்லாம் சரிசெய்ய தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    புதுவை

    'தமிழ்நாடு என்னும் பெயருக்கு பெரும் சரித்திரம் இருக்கிறது' - புதுவை ஆளுநர் தமிழிசை

    தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

    தமிழ்நாடு என்னும் பெயருக்கு பெரும் சரித்திரம் இருக்கிறது, பல போராட்டத்திற்கு பிறகே இந்த பெயர் கிடைத்தது.

    அதனை அவ்வளவு எளிதாக புறம் தள்ளிவிட முடியாது என்று கூறினார்.

    மேலும், 'நான் மக்களுக்காக தான் செயல்படுகிறேன். கோப்புகளை மக்கள் முகங்களாகவே நான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் ரூ.1000 அறிவிக்கப்பட்டு இன்னும் அளிக்கப்படாதபட்சத்தில், புதுவையில் முதல்வருடன் சேர்ந்து வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.

    மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுவையில் பார்க்கப்படுவதில்லை என்று கூறிய அவர், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர்கள், ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புதுவை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    புதுவை

    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    யூடியூப் வீடியோக்கள் பார்த்து வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025