NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்
    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்

    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம்

    எழுதியவர் Nivetha P
    Aug 29, 2023
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னிந்தியாவில் செயல்படும் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 2019ம் ஆண்டில் இருந்து ஜூன் மாதம் 2020ம் ஆண்டின் காலகட்டத்தில் மட்டும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி வழியே 1.17 கோடி வாகனங்கள் சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    இதில் 62.37 லட்ச வாகனங்கள் அதாவது 53.27 சதவிகிதம் விஐபி வாகனங்கள் என்பதால் அதற்கான கட்டணத்தினை சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

    எம்.பி.

    'பாஜக மாடல் டோல்கேட்' என்றே அழைக்கலாம் - எம்.பி. சு.வெங்கடேசன்

    இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள எம்.பி. சு.வெங்கடேசன், "பரனூர் சுங்கச்சாவடி நவீன ஊழலின் அடையாளமாக மாறியுள்ளது. இனி இதனை 'பாஜக மாடல் டோல்கேட்' என்றே அழைக்கலாம்" என்று கூறியுள்ளார்.

    இதே போல் ஆத்தூர் சுங்கச்சாவடியினை கடந்து சென்ற 88.92 லட்ச வாகனங்களுள் 32.39 லட்சம் வாகனங்கள் அதாவது 36.43 சதவிகிதம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து, ஜனவரி-செப்டம்பர் 2020ம் ஆண்டின் காலக்கட்டத்தில் லெம்பலகுடி சுங்கச்சாவடியில் 18.32%, கனியூர் சுங்கச்சாவடியில் 11.12%, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 12.60%, கப்பலூர் சுங்கச்சாவடியில் 25.08% என குறிப்பிட்ட சதவிகித விஐபி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    செங்கல்பட்டு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    மத்திய அரசு

    85% பேர் பழைய வருமான வரிமுறையையே தேர்ந்தெடுத்திருப்பதாக புதிய அறிக்கையில் தகவல் வருமான வரி விதிகள்
    ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது  மக்களவை
    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  கர்ப்பம்
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    தமிழ்நாடு

    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    ஆகஸ்ட் 16 முதல் சென்னையில் சர்வதேச கோல்ஃப் ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா
    நீட் தேர்வு - ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டம்  நீட் தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025