NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து
    சரிந்து விழுந்த 40 அடி தூண்

    பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரில் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் வரை தூண் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், அந்த சாலை வழியே நேற்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவர் தங்கள் இரு குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது நாகவாரா பகுதியில் இவர்கள் வரும் பொழுது அங்கு கட்டப்பட்டு கொண்டிருந்த 40 அடி தூண் சரிந்து விழுந்துள்ளது.

    இதில் லோஹித் (32), அவரது மனைவி தேஜஸ்வினி (28), மகள் வீனா (2) மற்றும் மகன் விஹன் (2) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அங்கிருந்தோர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பாதுகாப்பு உறுதி செய்வது அவசியம்

    மெட்ரோ கட்டுமானப்பணி ஒப்பந்ததாரர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, தேஜஸ்வினியும் அவரது 2 வயது மகன் விஹனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    லோஹித்தும் அவரது மகள் வீனாவும் தீவிரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து லோஹித் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் என் மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது இந்த கோர சம்பவம் நடந்தது. நான் என் வாழ்வில் அனைத்தையும் இழந்து விட்டேன்" என்று கதறியுள்ளார்.

    மேலும், இனிமேலாவது இது போன்று நடக்காமல் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

    லோஹித்தின் தந்தை, மெட்ரோ கட்டுமான பணி ஒப்பந்ததாரர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவே, கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    'விமான நிலையத்தில் சட்டையை கழற்றச் சொன்னார்கள்': பெண் குற்றசாட்டு! இந்தியா
    கடந்த ஆண்டில் மட்டும் 1.24 லட்சம் மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா! உலகம்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சொன்ன வார்த்தைகள்: நெகிழும் மருத்துவர்! இந்தியா
    பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025