NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து
    இந்தியா

    பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து

    பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து
    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023, 09:24 am 1 நிமிட வாசிப்பு
    பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து
    சரிந்து விழுந்த 40 அடி தூண்

    பெங்களூரில் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹென்னூர் பிரதான சாலையில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட் வரை தூண் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், அந்த சாலை வழியே நேற்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி இருவர் தங்கள் இரு குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தனர். அப்போது நாகவாரா பகுதியில் இவர்கள் வரும் பொழுது அங்கு கட்டப்பட்டு கொண்டிருந்த 40 அடி தூண் சரிந்து விழுந்துள்ளது. இதில் லோஹித் (32), அவரது மனைவி தேஜஸ்வினி (28), மகள் வீனா (2) மற்றும் மகன் விஹன் (2) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தோர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மெட்ரோ கட்டுமானப்பணி ஒப்பந்ததாரர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு

    ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, தேஜஸ்வினியும் அவரது 2 வயது மகன் விஹனும் பரிதாபமாக உயிரிழந்தனர். லோஹித்தும் அவரது மகள் வீனாவும் தீவிரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து லோஹித் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் என் மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது இந்த கோர சம்பவம் நடந்தது. நான் என் வாழ்வில் அனைத்தையும் இழந்து விட்டேன்" என்று கதறியுள்ளார். மேலும், இனிமேலாவது இது போன்று நடக்காமல் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். லோஹித்தின் தந்தை, மெட்ரோ கட்டுமான பணி ஒப்பந்ததாரர் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவே, கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர் தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள் இந்தியா

    இந்தியா

    மத்திய அரசுக்கு எதிரான மனு: ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றசாட்டு பாஜக
    NEFT, IMPS, RTGS இதில் சிறந்த ஆன்லைன் பணம் பரிமாற்றம் எவை? தெரிந்துகொள்வோம்! வங்கிக் கணக்கு
    ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்! ஜியோ
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023