NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின
    தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின

    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின

    எழுதியவர் Nivetha P
    Jan 09, 2023
    03:12 pm

    செய்தி முன்னோட்டம்

    2023ம் ஆண்டு வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

    தமிழக அரசு சார்பில், மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுகரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படுவதாகவும், இதனுடன் வேஷ்டி சேலை விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இதனையடுத்து பொங்கல்பரிசு தொகுப்பினை இன்று (ஜனவரி 9ம் தேதி) மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி துவக்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று திடீரென நள்ளிரவில் தீ பற்றி எரிந்துள்ளது.

    திடீரென தீ பற்றி எரிவதை கண்ட அந்த வளாகத்தில் இருந்த இரவுநேர ஊழியர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

    மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து ?

    தீயில் கருகிய 50,000 வேஷ்டி, சேலைகள்- தடய நிபுணர்கள் ஆய்வு

    இதனையடுத்து தல்லாகுளம், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இது குறித்த விசாரணையில், நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வைத்திருந்த சுமார் 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் தீ பற்றி எரிந்துள்ளது தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மக்களுக்கு இன்று பரிசு பெட்டகத்திற்கான டோக்கன் வழங்க திட்டமிட்டருந்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    பொங்கல் பரிசு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா

    பொங்கல் பரிசு

    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு எடப்பாடி கே பழனிசாமி
    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025