NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின
    இந்தியா

    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின

    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின
    எழுதியவர் Nivetha P
    Jan 09, 2023, 03:12 pm 1 நிமிட வாசிப்பு
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின
    தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின

    2023ம் ஆண்டு வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில், மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுகரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படுவதாகவும், இதனுடன் வேஷ்டி சேலை விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து பொங்கல்பரிசு தொகுப்பினை இன்று (ஜனவரி 9ம் தேதி) மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி துவக்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று திடீரென நள்ளிரவில் தீ பற்றி எரிந்துள்ளது. திடீரென தீ பற்றி எரிவதை கண்ட அந்த வளாகத்தில் இருந்த இரவுநேர ஊழியர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

    தீயில் கருகிய 50,000 வேஷ்டி, சேலைகள்- தடய நிபுணர்கள் ஆய்வு

    இதனையடுத்து தல்லாகுளம், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது குறித்த விசாரணையில், நியாயவிலை கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வைத்திருந்த சுமார் 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் தீ பற்றி எரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு இன்று பரிசு பெட்டகத்திற்கான டோக்கன் வழங்க திட்டமிட்டருந்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    பொங்கல் பரிசு
    மதுரை

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    பொங்கல் பரிசு

    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல் தமிழ்நாடு
    நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை தமிழ்நாடு
    பொங்கல் பரிசுக்கான கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல் இந்தியா
    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல் தமிழ்நாடு

    மதுரை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023