NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட் 
    மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட்

    மதிப்பெண் சான்று வழங்காத மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரம் - பதிவாளருக்கு பிடிவாரண்ட் 

    எழுதியவர் Nivetha P
    Jul 01, 2023
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2020ம் ஆண்டு, பழனியை சேர்ந்த பழனிச்சாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அதில், தான் கடந்த 1992-96வரையிலான கல்வியாண்டில் திண்டுக்கல் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு படித்ததாகவும், ஆனால், தனது பெயர் தேர்ச்சிப்பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பல்கலைக்கழகத்தில் கேட்ட போது, முழுமையாக அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாத காரணத்தினால் அவரது பெயர் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளனர்.

    இதனையடுத்து கடந்த 2014ம்ஆண்டு பழனிச்சாமி அனைத்து தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இதன்பின்னர் மீண்டும் தேர்ச்சிச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் கேட்டு இவர் விண்ணப்பித்துள்ளார்.

    ஆனால்,இதுவரை மதிப்பெண் பட்டியல் எதுவும் பல்கலைக்கழகம் வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    நீதிமன்றம் 

    வரும் 7ம் தேதி பதிவாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு 

    மேலும் சான்றிதழை வழங்குமாறு உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்த விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்னர் விசாரணைக்கு வந்துள்ளது.

    அப்போது மனுதாரர் பலமுறை கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் தேர்ச்சிக்கான சான்றிதழினைக்கேட்டு விண்ணப்பித்துள்ளார், கோரிக்கை மனு மற்றும் வழக்குப்பதிவும் செய்துள்ளார்.

    எனவே மதிப்பெண் சான்றிதழை உடனே அவருக்கு பல்கலைக்கழகம் வழங்கவேண்டும்.

    அவ்வாறு வழங்காவிடில், பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று(ஜூலை.,1)மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது தேர்ச்சி சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் கோபமடைந்த நீதிபதி காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

    மேலும் மதுரை காவல்துறை கண்காணிப்பாளர்மூலம் இந்த பிடிவாரண்ட் செயல்படுத்தப்பட்டு வரும் 7ம் தேதி பதிவாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    காவல்துறை

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்  சென்னை
    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு  விருதுநகர்

    காவல்துறை

    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி  திருப்பூர்
    மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை!  காவல்துறை
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை தமிழகம்
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை ஒத்திவைப்பு  மின்சார வாரியம்
    தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025