
மதுரையில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம்: விழாக்கோலம் பூண்ட தூங்காநகரம்
செய்தி முன்னோட்டம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'திருக்கல்யாணம்', இன்று (மே 8) காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதையொட்டி மதுரை நகரம் முழுவதும் பண்டிகை போல் மின்னுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபோகத்தை காணக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும், பார்க்கிங் வசதிகளும் மதுரை மாநகராட்சி சார்பாகவும், கோவில் நிர்வாக குழு சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக வாகன போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
பக்தர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Photo | உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மொய் காணிக்கை செலுத்த புதிய ஏற்பாடு.
— Sun News (@sunnewstamil) May 8, 2025
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக QR Code வைக்கப்பட்டுள்ளது.#SunNews | #Madurai |… pic.twitter.com/gerI3z8iIO
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN | மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின்போது தங்கள் தாலிகளை மாற்றி புதுப்பித்துக்கொள்ள வருகை தந்துள்ள பக்தர்கள்.
— Sun News (@sunnewstamil) May 8, 2025
கூட்ட நெரிசலில் சிக்காமல் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் 10 LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.#SunNews | #Madurai |… pic.twitter.com/aO4r16n2wP
போக்குவரத்து மாற்றங்கள்
வாகன நிறுத்தும் வழிமுறைகள் அறிவிப்பு
மஞ்சள் நிற சீட்டு:
மேல ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்தலாம். வருகை பாதை - வடக்கு மேலமாசி வீதி சந்திப்பு, வடுககாவல் கூடத்தெரு, தானப்ப முதலி தெரு.
வெளியேறும் பாதை-பண்டு ஆபீஸ், ஜான்சிராணி பூங்கா, நேதாஜி ரோடு.
ரோஸ் நிற சீட்டு:
வடக்கு ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்தலாம். திருப்பத்திற்குப் பிறகு தளவாய் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக செல்ல வேண்டும்.
நீலநிற சீட்டு:
தெற்காவணி மூல வீதி, கட்டபொம்மன் சிலை, நேதாஜி ரோடு, ஜான்சிராணி பூங்கா வழியாக வரலாம்.
வெளியேறும் வழிகள்-வெங்கல்கடை தெரு, விளக்குத்தூண்.
அனுமதி இல்லாத வாகனங்கள்:அதிகாலை 5:00 மணி முதல் கிழக்கு, தெற்கு, வடக்கு மாசிவீதிகளில் நிறுத்த அனுமதி.
கீழ் ஆவணி மூலவீதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.