NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு
    இந்தியா

    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு

    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு
    எழுதியவர் Nivetha P
    Jan 11, 2023, 12:32 pm 0 நிமிட வாசிப்பு
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு
    கொடைக்கானலில் பிளாஸ்டிக்கிற்கு தடை

    வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்விற்கு முன்னர் இந்த வழக்கின் விசாரணை வந்த நிலையில், "மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாகவே உத்தரவிட்டது. ஆனால், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை தாராளமாக கிடைக்கிறது" என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு "பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை" என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தார்கள்.

    பிளாஸ்டிக் தடைக்கு நிரந்தர படைகளை அமைக்க உத்தரவு

    இதனையடுத்து, "கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்" என்று கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். மேலும், அவ்வழி செல்லும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்யவேண்டும். சோதனைக்கு வாகனங்களை நிறுத்தாத ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இதனை தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய நிரந்தர படைகளை அமைக்க வேண்டும் என்று திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல் உலகம்
    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : யாருக்கு வெற்றி வாய்ப்பு? ஐபிஎல் 2023

    சென்னை உயர் நீதிமன்றம்

    ஜெயலலிதா சொத்தில் பங்குகேட்டு கர்நாடக முதியவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு ஜெயலலிதா
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை
    வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு தமிழ்நாடு
    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023