NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்
    மாமல்லபுரம் சென்ற மத்திய பிரதேச முதல்வர்

    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர்

    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லப்புரத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தோடு நேற்று வருகை தந்துள்ளார்.

    முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடற்கரை கோயில் பகுதிக்கு வந்த அவரை தமிழக அரசு சார்பில் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் பூங்கொடுத்து வரவேற்றார்.

    பிறகு சுற்றுலாத்துறை சார்பில் அவருக்கு மாமல்லப்புரம் வரலாற்று சின்னங்கள் குறித்த சுற்றுலா தகவல் புத்தகம் கொடுக்கப்பட்டது.

    இதனை பெற்றுக்கொண்ட சிவராஜ் சிங் காவல்துறை அதிகாரிகளை அருகில் அழைத்து "சுற்றுள்ள வந்துள்ள மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம். மக்களோடு மக்களாகவே நான் சுற்றிப்பார்த்து விட்டு செல்கின்றேன்" என்று கூறியுள்ளார்.

    பிறகு அவர் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் சென்று, பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட எழில்மிகு கோயில் தோற்றத்தை கண்டு ரசித்தார்.

    இவர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

    சுற்றுலா வந்த சில மத்திய பிரதேச மாநில மக்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் சிவராஜ் சிங்

    இதனைத் தொடர்ந்து, அவருடன் இருந்த மாமல்லபுர சுற்றுலா வழிகாட்டி காதர் பாஷா என்பவர், அங்குள்ள சிற்பங்கள் குறித்தும், கடலோரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு உருவாக்கப்பட்டது.

    உப்பு காற்றில் சிற்பங்கள் மற்றும் கோயில்கள் பாதிப்படையாமல் எவ்வாறு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்றவைகளை அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தார்.

    இறுதியாக சிவராஜ் சிங் அவர்கள் தனது குடும்பத்துடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அப்போது அங்கு வந்த மத்திய பிரதேச சுற்றுலா பயணிகள் சிலர் அவர் அருகில் சென்று செல்பி எடுத்துக்கொண்டனர்.

    அவரும் அவர்களுக்கு அனுமதி அளித்து, தனது மாநில மக்களை சந்தோஷபடுத்தினார்.

    இவர் வருகையையொட்டி அங்குள்ள பகுதிகளில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் பல போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.என்பது குறிப்பிட்டத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மகாபலிபுரம்

    சமீபத்திய

    இரவில் டெல்லியை உலுக்கிய கனமழை; விமான சேவை மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு டெல்லி
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி

    தமிழ்நாடு

    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! அரசியல் நிகழ்வு
    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை சென்னை

    மகாபலிபுரம்

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மெரினா கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025