NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு
    இந்தியா

    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு

    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு
    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023, 05:02 pm 0 நிமிட வாசிப்பு
    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு
    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடெமியில் தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் புகைப்பட கண்காட்சி நேற்று(பிப்.,10) துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் திறந்து வைத்ததோடு, இது குறித்த புத்தகம் ஒன்றினையும் வெளியிட்டார். அதன் பின்னர் பேசிய அவர், தமிழக பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம், 2006ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் துவங்கப்பட்டது. கண்காட்சியை பார்த்ததில் புதிய செய்திகளை தெரிந்து கொள்வதோடு, வரலாற்று சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறினார். மேலும் புகைப்படங்கள் மிக உயிரோட்டமாக உள்ளது என்று கூறிய அவர், குறிப்பிட்ட சம்பவங்கள் எந்த இடத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதை தெளிவாக உணர்த்தும் வகையில் உள்ளது என்றும் கூறினார்.

    புகைப்பட சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு

    தொடர்ந்து பேசிய அவர், செய்திகளை படித்து தெரிந்துகொள்வதோடு, ஒரு புகைப்படத்தை பார்த்ததுமே செய்தி என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். அதனால் தான் பேனாவை போல் புகைப்படங்களும் சக்தி மிக்கது என்று கூறப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த சங்கம் சார்பில் புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை குறித்த கோரிக்கை வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எம்.எல்.ஏ.எழிலன் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். சென்னையில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சி வரும் 15ம் தேதி வரை நடைபெறும் என்றும், தினமும் காலை 10 மணி முதல் 6 மணிவரை பார்வையிட அனுமதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு
    சென்னை

    மு.க ஸ்டாலின்

    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு முதல் அமைச்சர்
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மத்திய அரசு
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு
    பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி கோலிவுட்

    தமிழ்நாடு

    கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி கோவை
    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் ஈரோடு
    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை

    சென்னை

    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு தமிழ்நாடு
    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி
    சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு விமானம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023