NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
    இந்தியா

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
    எழுதியவர் Nivetha P
    Dec 24, 2022, 11:04 pm 0 நிமிட வாசிப்பு
    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
    மாமல்லப்புரத்தில் இந்திய நாட்டிய விழா

    காஞ்சிபுரம் மாமல்லப்புரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வண்ணம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று துவங்கிய இந்த விழா அடுத்த மாதம் 12ம் தேதி வரை, 20 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய இந்த விழாவிற்கு வந்தவர்களை சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் வரவேற்றார். சிறு குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் விழாவிற்க்கு முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

    20 நாட்களுக்கு பாரம்பரிய நாட்டியங்களும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது

    இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் இடத்தில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி மாமல்லபுரம் முதலில் இடம் பிடித்திருப்பது உண்மையில் பெருமைப்படக்கூடிய ஓர் நிகழ்வாகும். 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்" என்று கூறினார். மேலும் மாமல்லபுரத்தில் பல சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து முதல் நாள் நிகழ்ச்சியில் மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சென்னை இசை கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசை கச்சேரி, பிரியதர்ஷினி நிருத்யாலயா குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை அரங்கேறியது. மேலும் பரதம், குச்சிப்பிடி, ஒடிசி போன்ற பாரம்பரிய நாட்டியங்களும், கரகம், காவடி போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா

    தமிழ்நாடு

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை

    தமிழ்நாடு செய்தி

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி
    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் திமுக
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை சென்னை
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை விழுப்புரம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023