NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
    மாமல்லப்புரத்தில் இந்திய நாட்டிய விழா

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

    எழுதியவர் Nivetha P
    Dec 24, 2022
    11:04 pm

    செய்தி முன்னோட்டம்

    காஞ்சிபுரம் மாமல்லப்புரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவரும் வண்ணம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில், நேற்று துவங்கிய இந்த விழா அடுத்த மாதம் 12ம் தேதி வரை, 20 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    நேற்று துவங்கிய இந்த விழாவிற்கு வந்தவர்களை சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் வரவேற்றார். சிறு குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் விழாவிற்க்கு முன்னிலை வகித்தனர்.

    சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

    மாலை 5.45க்கு துவங்கி 8.30 மணி வரை நடக்கும்

    20 நாட்களுக்கு பாரம்பரிய நாட்டியங்களும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது

    இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் இடத்தில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளி மாமல்லபுரம் முதலில் இடம் பிடித்திருப்பது உண்மையில் பெருமைப்படக்கூடிய ஓர் நிகழ்வாகும். 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் இங்குள்ள சிற்பங்களை வடிவமைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்" என்று கூறினார்.

    மேலும் மாமல்லபுரத்தில் பல சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து முதல் நாள் நிகழ்ச்சியில் மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சென்னை இசை கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசை கச்சேரி, பிரியதர்ஷினி நிருத்யாலயா குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை அரங்கேறியது.

    மேலும் பரதம், குச்சிப்பிடி, ஒடிசி போன்ற பாரம்பரிய நாட்டியங்களும், கரகம், காவடி போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025