NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பரிசுக்கான கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் பரிசுக்கான கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல்
    கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல்

    பொங்கல் பரிசுக்கான கரும்புகள் இன்ச் டேப்பில் அளந்து கொள்முதல்

    எழுதியவர் Nivetha P
    Jan 09, 2023
    09:29 am

    செய்தி முன்னோட்டம்

    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கோலாகலமாக தமிழகத்தில் கொண்டாடப்படவுள்ளது.

    தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பினை இணைக்க கோரிக்கைகள் எழுந்த நிலையில், கரும்பு கொள்முதல் தற்போது செய்யப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 742ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற நிலையில்,

    அதில் 40 ஏக்கர் கரும்பு மட்டுமே போதுமானது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து கரும்பு கொள்முதல் பணிகளை மேற்கொண்டுள்ளது.

    திம்மராவுத்தன் குப்பம் பகுதியில் நடந்த கொள்முதல் பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ஆய்வினை மேற்கொண்ட பின்னர், மாவட்ட ஆட்சியர் 6 அடி குறைவாக உள்ள கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

    திட்டவட்டமாக பேசிய ஆட்சியர்

    இன்ச் டேப் கொண்டு கரும்புகளை அளந்து கொள்முதல் செய்த அதிகாரிகள்

    இந்த உத்தரவில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர், பின்னர் அதிகாரிகள் இன்ச் டேப் கொண்டு கரும்புகளை அளந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஆட்சியரிடம் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஒரு வயலில் உள்ள அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்தால் தான் உரிய லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள்.

    அதற்கு அவர், "நானும் விவசாய குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளேன். உங்கள் கஷ்டம் எனக்கும் புரியும்.

    ஆனால் முதல்வர் வெளியிட்ட அரசாணையில் 6 அடி உயர கரும்பு என குறிப்பிட்டுள்ளார்" என்று கூறினார்.

    மேலும் அவ்வாறு தான் கொள்முதல் செய்யப்படும், இல்லையேல் பொதுமக்கள் நீங்களே 6 அடி உயர கரும்பை கூறியவாறு கொடுக்கவில்லை என்று குறை கூறுவீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொங்கல் பரிசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பொங்கல் பரிசு

    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் மு.க.ஸ்டாலின்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு அதிமுக
    பொங்கல் பரிசுத்தொகுப்பான டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் - ஜனவரி 8ம் தேதி வரை வழங்கப்படும் என தகவல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025